search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்"

    • இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.
    • இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்கவுள்ளார்.

    இதன்மூலம் இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலியிடம் பிசிசிஐ கலந்தோலோசிக்கவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இனிமேல் டி20 போட்டிகளுக்கு பாண்ட்யா தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை பயிற்சியாளராக கம்பீரை நியமனம் செய்வதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிடம் பிசிசிஐ கலந்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கம்பீருக்கும் கோலிக்கும் இடையே கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருவரும் கட்டிப்பிடித்து பிரச்சனையை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.
    • கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை :

    டி20 உலக கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவடைந்தது. அது மட்டுமல்லாமல் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பில்டிங் பயிற்சியாளர் தீலிப் ஆகியோரின் காலமும் முடிவடைந்துவிட்டது.

    இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். இந்த சம்பளத்தை விட கூடுதலாக தமக்கு வேண்டும் என கம்பீர் கேட்டு இருக்கிறார். இதனால்தான் அவரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கவுதம் கம்பீருக்கு எவ்வளவு சம்பளம் மட்டும் சலுகைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவருக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடியை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் சென்றால் நாள் ஒன்றுக்கு தினப்படியாக ரூ. 21 ஆயிரம் வழங்கபட உள்ளது.

    இதை தவிர வெளிநாட்டிற்கு சென்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதியும் மற்றும் சலவை செலவுகள் ஆகியவற்றிற்கும் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பு குறித்து கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். மதிப்புமிக்க வேறொரு பொறுப்புடன் மீண்டும் இந்திய அணிக்குள் வருவதில் பெருமை கொள்கிறேன்.

    ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 140 கோடி இந்தியர்களின் கனவுகளை தோள்களில் சுமக்கும் வீரர்களுடன் இணைந்து, அதனை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
    • இந்த புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கிறது.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஷா பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. கவுதம் கம்பீர் வளர்ச்சியடைந்து வரும் கிரிக்கெட்டை அருகிலிருந்து பார்த்தவர்.

    தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை எதிர்கொண்டு, சிறந்து விளங்கியதால் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். 

    • தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.
    • கவுதம் கம்பீருக்கு ஒரு அணிக்கு பயிற்சியளிப்பதில் அனுபவம் இல்லை.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் கவுதம் கம்பீர் இடையே நடக்கும் சம்பள பேச்சுவார்த்தையால், இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமித்து அவருக்கு முழு சுதந்திரம் வழங்கவும், தனியாக பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்காமல் அதுவும் கம்பீரின் மேற்பார்வையிலேயே நடக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் மூலம் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தான் நியமிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

    ×