என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி எம்எல்ஏ"

    • ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவான கர்தார் சிங் தன்வார் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.
    • ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், அவரது மனைவி ஆகியோர் டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வர் கூறுகையில், டெல்லி மோசமான நிலையில் உள்ளது. வளர்ச்சிப் பணிகள் இல்லாததால் தண்ணீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தில் இருந்து உருவான கட்சி ஊழலில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

    • டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • தலைவர் கைது, முக்கிய அமைச்சரின் ராஜினாமா என ஆம் ஆத்மி ஆட்சி சிக்கலில் உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், தனக்கு பதில் இளம் தலைவர் அதிஷியை முதல் மந்திரி ஆக்கினார்.

    டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நான் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று குற்றமற்றவர் என நிரூபித்த பிறகு முதல் மந்திரி பதவியேற்பேன் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    இதற்கிடையே, டெல்லி போக்குவரத்து அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தலைவர் கைது, சிறைவாசம், கட்சியில் சலசலப்பு, முக்கிய அமைச்சரின் ராஜினாமா என அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சி ஆட்டம் கண்டு வருகிறது.

    இந்நிலையில், சீலாம்புர் எம்.எல்.ஏ.வான அப்துல் ரகுமான் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டிய அப்துல் ரகுமான், இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

    ×