என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளர் பள்ளிகள்"

    • சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
    • கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்ற பெயர்களை மாற்ற வேண்டும்

    செங்குந்த முதலியார் சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடத்தை நடத்துகிறார்கள். ஆனால் அந்தப் பாடம் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதியில் உள்ளது. இது எப்படி நியாயமாகும்! என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அதனால் கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால், சாதி பெயரை நீக்குவது குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இப்போது நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சங்கங்களில் உள்ள சாதி பெயரை நீக்குவது குறித்து பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சாதிப் பெயரை தொடர்ந்து சங்கங்கள் பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அந்த சங்கத்தின் பதிவை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாதியின் பெயரில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி.நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    அதன்படி சாதிப்பெயரை நீக்கி கல்வி நிலையங்கள் பெயர் பலகை வைக்க வேண்டும். ஒரு வேலை இதை செய்ய மறுத்தால் அந்த கல்வி நிலையத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை, அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும்.

    அதேபோல அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்பதில் இருந்து இந்த ஆதிதிராவிடர் என்ற சாதி பெயரை நீக்க வேண்டும். வேறு சாதியின் பெயரில் அரசு பள்ளிக்கூடம் நடத்தினாலும் அந்தப் பெயரையும் நீக்க வேண்டும்.

    நன்கொடையாளர்கள் கல்வி நிலையங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயரில் இருந்த ஜாதியை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதன் பின்பு நீதிபதி, தற்போதுள்ள மாணவ சமுதாயம் பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அருவாளை எடுத்துச் சென்று ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர்.

    இது போன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தார்.

    • வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.

    இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    இன்று தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு விடுமுறை என கூறி வந்த மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தங்களுக்கு பள்ளி விடுமுறை என நினைத்து மாணவர்கள் உற்சாகமாக திரும்பினர். அதன்பிறகு கள்ளர் பள்ளிகளை பெயர்மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினை கைவிட அதிமுக கோரிக்கை
    • அதிமுக சார்பில் 24.08.2024 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

    பள்ளிக் கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆங்கிலேயர் காலம் முதல் கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, எளிய பொருளாதார நிலையிலும் தங்களுக்கு தாங்களே "கள்ளர் காமன் பண்ட்" மூலமாகவும் தங்கள் நிலங்களையும், கடும் உழைப்பையும் கொடுத்து அமைத்து கொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்பட்டோர் நலத்துறையிடமிருந்து இருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து 17.08.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    அந்த அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் இச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை விடியா திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.

    பேனா சிலை வைப்பதிலும், நூறு ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், அதனை விளம்பரப் படுத்துவதிலும் மட்டுமே ஈடுபாடாக உள்ள இந்த விடியா திமுக அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறு இல்லை. அதே போல், தற்போதும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாக முறையை மாற்றத் துடிக்கும் தன்னுடைய மக்கள் விரோதப் போக்கில் இருந்து விடியா திமுக அரசு மாறுவதாகத் தெரியவில்லை.

    எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 24.08.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×