search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூனியன் பிரதேசம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டின் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
    • நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன்

    ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நேற்று  பீகார்  ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    நேற்று நடந்த மக்களவை பட்ஜெட் கூட்டத்தில் பேசிய அவர், வங்காளதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களால், ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் மற்றும் பிகார்  பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.

    வங்காளதேசத்தில் இருந்து வந்து பழங்குடியின சமூகங்கள் அதிகம் வாழும் குடியேறிய இஸ்லாமியர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொள்வதால் , இந்து மதத்தினர் வாழும் கிராமங்கள் முற்றிலுமாக காலியாகும் சூழல் உள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம்.

    நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன். எனவே வங்க தேசத்தினர் நாட்டுக்குள் நுழையும் பகுதிகளான மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா, முருஷிதாபாத் மாவட்டங்களையும், பிகாரில் உள்ள கிஷன்கஞ்ச், ஆராரியா, கதிஹார் மாவட்டங்களையும், ஜார்கண்ட் பகுதிகளையும்   பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் இந்துக்கள் மறைந்துபோவார்கள். மேலும் வெளிநாட்டினர் ஊடுருவலைத் தடுக்கும் தேசிய குடிமைகள் பதிவேடான NRC யை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

    • மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது.
    • எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது

    ஜம்மு காஷீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து  ஜம்மு காஷ்மீர் பகுதிகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக கடந்த 2019 ஆம் ஆண்டு கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பிரித்தது. இதற்காக பிரத்தேயகமாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.

    இந்நிலையில் வரும் செப்டெம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது  சர்ச்சையாகியுள்ளது.

     

     

    இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரங்கள்  வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலத்தின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் நீதித்துறை, காவல்துறை, அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடம்மாற்றுதல் உள்ளிட்டவற்றில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள்ளன.

    இந்த துறைகளில் அதிகாரிகளை நியமிப்பதற்கு ஆளுநரின் ஒப்புதல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அதிகாரிங்கள் ஜூலை 12 முதல் நடைப்முறைக்கு வந்துள்ளன.  

    ×