என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லோக்ஆயுக்தா"
- லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
- இந்த போராட்டத்தில் மக்கள் என் பக்கம் உள்ளனர். அரசியலமைப்பு எனக்கு நம்பிக்கை உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். சித்தராமையா மீது வழக்கு தொடரலாம் என கவர்னர் உத்தரவிட்ட நிலையில் தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்கிடையே சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜக போராட்டம் படப்பிறகு வருகிறது.
இந்நிலையில் விசாரணையை எதிர்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்து நிபுணர்களுடன் சட்ட ஆலோசனை நடத்துவேன் என்றும். விசாரணை நடத்துவதற்கான உத்தரவு ரத்தாகும். இந்த போராட்டத்தில் மக்கள் என் பக்கம் உள்ளனர். அரசியலமைப்பு எனக்கு நம்பிக்கை உள்ளது.
இந்த போராட்டத்தில் உண்மை ஜெயிக்கும். நான் ஏன் பதவி விலக வேண்டும். ஜாமினில் உள்ள குமாரசாமி பதவி விலகினாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலேயும் தன்மீதான வழக்கு விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதால் அதை தான் எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் சித்தராமையா அடுத்த காட்டமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
- கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசாரின் தொடர் நடவடிக்கையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் 12 அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அதிகாலையிலேயே லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பெங்களூரு, பெங்களூரு புறநகர், சிவமொக்கா, துமகூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், யாதகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 60 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளின் வீடுகளில் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம், கார்கள், இருசக்கர வாகனங்கள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். அதிகாரிகளின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது.
சிவமொக்கா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள கர்நாடக முதலீடு பிரிவில் பணியாற்றும் முதன்மை செயல் இயக்குனர் முத்துக்குமார், பெங்களூரு வடக்கு வருவாய்த்துறை உதவி அதிகாரி மஞ்சுநாத், மண்டியாவில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி சேத்தன்குமார், யாதகிரி மாவட்ட பஞ்சாயத்து திட்டமிடுதல் துறை இயக்குனர் பலவந்த், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அந்தரகங்கே பஞ்சாயத்து தலைவர் நாகேஷ் ஆகிய அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதுபோன்று, பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் கால்நடைத்துறை ஆஸ்பத்திரி டாக்டர் சித்தப்பா, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹெப்பகோடி நகரசபை கமிஷனர் நரசிம்மமூர்த்தி, பெங்களூருவில் உள்ள கர்நாடக தொழில் துறையில் நிலம் கையகப்படுத்தும் பிரிவில் உதவி அதிகாரியாக பணியாற்றும் பி.பி.ராஜா, பெங்களூரு வணிக வரித்துறையின் இணை இயக்குனர் ரமேஷ் குமார், பெங்களூரு சர்வே துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி அத்தார் அலி, மங்களூரு மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் ஆகிய அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
பெங்களூருவில் சர்வே துறையில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் அத்தார் அலி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். பெங்களூரு கல்யாண் நகர் அருக எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள வீட்டில் சோதனை நடத்துவதற்கு போலீசார் வருவது பற்றி அறிந்ததும் தனது வீட்டில் இருந்த பணம், தங்க நகைகளை ஒரு பையில் வைத்து பக்கத்து வீட்டில் அத்தார் அலி வீசினார். இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார், பக்கத்து வீட்டுக்கு சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது ரூ.25 லட்சம் ரொக்கம், 2 கிலோ 200 கிராம் தங்க நகைகள், 2 வெள்ளி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி அத்தார் அலியிடம் விசாரணை நடத்திய போது, அந்த நகை, பணம் போலீஸ் கையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பக்கத்து வீட்டில் வீசியதாக தெரிவித்தார். அத்தார் அலி வீட்டில் சிக்கிய நகைகள், பணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சோதனையில் ரூ.50 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் மற்றும் கைதுப்பாக்கி, ஏர்கன் ஆகியவையும் சிக்கியது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசாரின் தொடர் நடவடிக்கையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்