என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக்ஸ்"

    • உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை.

    2-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை செய்ன் நதிக்கு அழைத்து வந்து, சுமார் 6 கி.மீ தூரப்பாதையில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • பீச் வாலிபால் போட்டிகள் ஈபிள் டவர் அருகே நடைபெறுகிறது.
    • தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்தவுடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்.

    ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளில் வழக்கமாக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு புதிதாக மைதானங்கள் கட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் பாரீசில் 95 சதவீதம் ஏற்கெனவே உள்ள ஸ்டேடியங்களிலும் தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதிக அளவில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களை கவரும் வகையில் தற்காலிக மைதானங்கள் பாரீஸ் நகரின் முக்கிய அடையாள சின்னங்களான ஈபிள் டவர், கிரான்ட் பேலஸ் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பீச் வாலிபால் போட்டிகள் ஈபிள் டவர் அருகே நடைபெறுகிறது. இவ்வாறு தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்தவுடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்.

    லிங்கை கிளிக் செய்யவும்- 162 படகுகளில் Entry... 4 மணி நேர கொண்டாட்டம்.. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்


    • அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார்.
    • பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான ஆஸ்திரேலியப் பெண் 5 நபர்களால்  கூட்டுப்பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் ஐவரிடம் இருந்து தப்பித்து உணவகம் ஒன்றில் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கும் அதிர்ச்சி வீடியோவும் வெளியாகியுள்ளது.

    காயங்களுடன் தனது உடையை தலைகீழாக அணிந்து அலங்கோலமாக அந்த பெண் உணவகத்தில் நுழைந்து அங்குள்ளவர்களிடம் தன்னை காப்பற்றும்படி மன்றாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 19 இரவு அந்த ஆஸ்திரேலிய பெண் பாரிஸ் நகரின் பிரபலமான பகுதியான மவுலின் ரோஜ் [Moulin Rouge] பகுதியில் உள்ள பார்கள் மற்றும் கிளப்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

    அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார். அங்கு வைத்து அவர்கள் ஐவரும் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் ஒருந்த கபாப் உணவகத்தில் தஞ்சமடைந்த அந்த பெண் தனது நிலைமையை அங்கிருந்த ஊழியர்களிடம் எடுத்துக்கூற முயன்றார்.

    ஆனால் அப்பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.நிலவரத்தை அறிந்து கடை ஊழியர் அவனை நெருங்குவதற்கு முன் அவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான்.

    இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வன்புணர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த பெண் இன்னும் குழப்ப நிலையிலேயே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த ஐவரும் ஆபிரகிரர்களைப் போல் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது
    • 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.

    அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.

    4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான  போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடங்கினர்.
    • தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைந்தது. பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

    இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் [Marseille]  உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது. 

    • டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
    • கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட்ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியிருந்தார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடேவை எதிரிகொண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

    இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு [pre-quarterfinals] முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஆடிய மறக்கமுடியாத ஆட்டமாக நேற்று நடந்த ஆட்டம் மாறியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட் ஆஃப் 32  சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதி பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார். 

    • இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

    இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

    இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார். 

    அந்த வகையில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த ரமீதா 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் 145.3 புள்ளிகளை பெற்றார்.

    இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 208.4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

    • இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
    • இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதையடுத்து, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.

    இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!

    மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

    • இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
    • நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதினார்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு [Fencing] வீராங்கனை நாடா ஹபீஸ் [Nada Hafez] 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     

     

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை" என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் சுற்று 16 க்கு முன்னேறினார்.

     

    நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

    • ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] கலந்துகொண்டார்
    • தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகிறது.

    தோல்வியின் தாக்கமும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. இந்நிலையில் ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் கலந்துகொண்ட 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] 200 மீட்டர் பெண்கள் ஒற்றயர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிக்கு தகுதி பெறும் சுற்றில் கனேடிய வீராங்கனையுடன் விளையாடினார்.

     

    2 நிமிடங்கள் 14.20 நொடிகளில் 200 மீட்டரைக் கடந்து நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய தமரா, திடீரென மயங்கி விழுந்தது அங்குள்ளவர்களைப் பரபரப்பில் ஆழ்த்தியது. துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழு, தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றது.

     

     

    தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தமரா, சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக ஒலிம்பிக் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னோடு போட்டியிட்ட கனேடிய வீராங்கனை சம்மர் மெக்லண்டோஷ் -ஐ Summer McIntosh விட 4.3 நொடிகள் தாமதமாக தமரா இலக்கை அடைந்ததால் காலிறுதிக்கு அவர் தகுதி பெறவில்லை.   

     

    • சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.
    • 'நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன்'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில்  கனடா நாட்டு வீரர் டைலர் மிஸ்லாஸுக் Tyler Mislawchuk நேற்று நடந்த ட்ரைலதான் போட்டியின் பின் 10 முறை வாந்தி எடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

     

    ட்ரைலதான் என்பது நீச்சல், ஓட்டம், மற்றும் சைக்கிளிங் ஆகிய 3 விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டியாகும். அந்த வகையில் நேற்று நடந்த டிராலதான் போட்டியில் சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.

    முன்னதாக சியன் நதி மாசுபாடு காரணமாக ட்ரைலதான் போட்டிகள் தாமதமாக நடந்தது கவனிக்கத்தக்கது. மேலும் போட்டி தொடங்கும்போது, காற்றின் வெப்பநிலையானது 27 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்தது. எனவே மாசுபாடு மற்றும் வெப்பநிலை காரணமாக டைலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

     

    இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய கனேடிய வீரர் டைலர், நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன், அங்கு குளிர்காலத்தில் வெப்பநிலையானது மைனஸ் 50 டிகிரி வரை குறையும். ஆனால் நான் இப்போது சம்மர் ஒலிம்பிக்சில் விளையாட வந்துள்ளேன் என்று தனக்கு 27 டிகிரி செல்ஸியசே அதிகம் என்ற அர்த்தத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த போட்டியில் 1:44:25 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து டைலர் 9 வது இடம் பிடித்துள்ளார்.பிரிட்டன் வீரர் அலெக்ஸ் யீ [ Alex Yee] 1:43:33 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றுள்ளார். 

    • இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.
    • இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தத்தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே [Avinash Sable] 3000 மீ ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் 8:15.43 நிமிடங்களில் இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.

     

    இதன்மூலம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அவினாஷ் தகுதி பெற்றுள்ளார்.

     

     3000 மீ ஸ்டீப்பில் சேஸ் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.   

    ×