என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாரி அத்தபத்து"

    • மலேசியா அணிக்கு எதிராக சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்தார்.
    • 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு மலேசியா ஆல் அவுட் ஆனது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தம்புலாவில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 184 ரன்கள் குவித்தது.

    இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மலேசியா தரப்பில் வினிப்ரெட் துரைசிங்கம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மலேசியா அணி வீராங்கனைகள் இலங்கயின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு மலேசியா ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் ஷஷினி கிம்ஹானி 3 விக்கெட், கவிஷா தில்ஹாரி, காவ்யா காவிந்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சமாரி அத்தபத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். மகளிர் டி20 ஆசிய கோப்பையில் முதல் சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

    மகளிர் டி20 ஆசிய கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர்கள்:

    1 - சமாரி அத்தபத்து: ஜூலை 2024-ல் மலேசியாவுக்கு எதிராக 119*

    2 - மிதாலி ராஜ்: ஜூன் 2018-ல் மலேசியாவுக்கு எதிராக 97*

    3 - ஹர்ஷிதா சமரவிக்ரம: அக்டோபர் 2022-ல் தாய்லாந்துக்கு எதிராக 81

    4 - ஜெமிமா ரோட்ரிக்ஸ்: அக்டோபர் 2022-ல் இலங்கைக்கு எதிராக 76

    5 - ஜெமிமா ரோட்ரிக்ஸ்: அக்டோபர் 2022-ல் யுஏஇ எதிராக 75* 

    • மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இத்தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    அதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இதனால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் யுபி வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அத்தபத்து எதிர்வரும் நியூசிலாந்து தொடரின் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜார்ஜியோ வோல் யுபி வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜியா வோல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இத்தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×