search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபந்தனை ஜாமின்"

    • இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.
    • கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வழக்கில் ஜாமின் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை அடுத்து அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடி வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ந்தேதி கேரளாவில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதைதொடர்ந்து இந்த இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகம் மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    • சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார்.

    இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.
    • மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    பெங்களூரு:

    எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வின் மூத்த மகன் சூரஜ் ரேவண்ணா (வயது 37). டாக்டரான இவர் தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார். இந்த நிலையில் சூரஜ் ரேவண்ணா, தனது கட்சி தொண்டர் உள்பட 2 பேரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகார்களின்பேரில் ஒலேநரசிப்புரா போலீசார் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி சூரஜ் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    இந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் சூரஜ் ரேவண்ணாவை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன் மீதான முதல் பாலியல் வழக்கில் ஜாமின் கேட்டு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் சூரஜ் ரேவண்ணா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு கோர்ட்டு தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது ஜாமின் பெற்று வெளியே வந்த பிறகு புகார் அளித்த நபரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்ட கூடாது. மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆஜராகி இருக்க வேண்டும். மேலும் ரூ.2 லட்சத்திற்கு டெபாசிட் தொகையை உத்தரவாதமாக செலுத்துவது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முதல் வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சூரஜ் ரேவண்ணா 2-வது பாலியல் வழக்கில் கைதாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    ×