என் மலர்
நீங்கள் தேடியது "ரோப் கார் சேவை"
- திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் ரோப் கார் பாதி வழியிலேயே நின்றுளளனர்.
- ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.
குளித்தலை அருகே அய்யர்மலையில் திடீரென ரோப் கார் பழுதடைந்து நின்றதால், பாதி வழியிலேயே பக்கதர்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.
திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் ரோப் கார் பாதி வழியிலேயே நின்றுளளனர்.
ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்தில் இருந்து கயிறு நழுவியதால் ரோப் கார் பாதியில் நின்றுள்ளது.
ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.
அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று ரோப் கார் சேவை பழுதாக நின்றுள்ளது. இதைதொடர்ந்து, கீழே இருந்து மேலே செல்லும் பெட்டியில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏணி மூலம் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
பாதியில் நின்ற ரோப் காரில், 3 பெண் பக்தர்கள் வெகு நேரமாக தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர பராமரிப்புக்காக ரோப் கார் சேவை வருகிற 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாகவும் படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
- அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்னரே வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கத்தை அவர்கள் இந்த ஆண்டும் கடைபிடித்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கடந்த ஆண்டு மாட்டு வண்டிகளை கிரி வீதியில் நிறுத்த அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாக தனியார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ரூ.400 கட்டணத்துக்கு மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன வசதி இல்லாத காலத்தில் இருந்து எங்கள் முன்னோர்கள் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
மேலும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும், சிரமம் இன்றியும் மலைக்கோவிலுக்கு செல்லவும், பின்னர் அங்கிருந்து அடிவாரம் வந்தடையவும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 1 மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
தற்போது தைப்பூச திருவிழா நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (30-ந் தேதி) ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதை, யானைப்பாதை வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
- பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்த பெற்ற யோக நரசிம்மசாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு 1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். கார்த்திகை மாத பெருவிழாவையொட்டி முதியோர் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ரோப் கார் சேவை இயங்கி வருகிறது.
இதனால் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. ரோப் காரில் மலைக்கு செல்ல ரூ.50, மலையிலிருந்து இறங்க ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை (ஞாயிற்றுகிழமை) முதல் 12-ந்தேதி (புதன்) வரை 4 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.