என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குகி"

    • மணிப்பூரில் மெய்தி- குதி பிரிவினருக்கு இடையில் 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.
    • வன்முறை நடைபெற்று 2 வருடங்கள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் போராட்டத்திற்கு வலியுறுத்தல்.

    மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மே 3ஆம் தேதி மூட வேண்டும் என்று இரண்டு குக்கி-சோமி மாணவர் அமைப்புகள் மக்களை வலியுறுத்தியுள்ளன.

    இனக்கலவரம் வெடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மே 3, 2025 அன்று சோமி மாணவர் கூட்டமைப்பு (ZSF) மற்றும் குக்கி மாணவர் அமைப்பு (KSO) ஆகியவை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடி மௌனமாக நாளைக் கடைப்பிடிக்க" அனைவரையும் வலியுறுத்தியுள்ளன.

    மேலும் "அனைவரின் வீடுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்ற வேண்டும். தியாகிகளின் கல்லறையில் ஒரு கூட்டு பிரார்த்தனையும், சூரசந்த்பூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நினைவுச் சுவரில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்படும்" என்றும், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டன.

    மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தினரான மெய்தி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்ப தெரிவித்து 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி குகி சமூகத்தினர் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இனக் கலவரமாக மாறியது.

    இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் முதலமைச்சர் என் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மாநில சட்டமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக, பழங்குடியினத் தலைவர்கள் அமைப்பு (ITLF) மே 3 ஆம் தேதி "பிரிவினை தினமாக" அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. குகி-சோ சமூகங்களை ஆழமாகப் பாதித்த இன மோதலில் உயிரழந்தவர்களின் நினைவுக்கூரும் நாளாக இருக்கும் எனத் தெரிவிததுள்ளது.

    இம்பால் பள்ளத்தாக்கை அடிப்படையான கொண்டு மெய்தி சமூக அமைப்பான COCOMI, மே 3ஆம் தேதி மக்கள் அனைவரும் அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, குமான் லாம்பாக் மைதானத்தில் மாநிலத்தில் எதிர்காலம் குறித்த ஆலோசனை பொதுக்கூட்த்தில் கலந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை.
    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டம் 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

    ஜூலை 31-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் 10 குகி-சோ (Kuki-Zo) எம்.எல்.ஏ.க்களை பங்கேற்கும்படி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என மணிப்பூர் முதல்வர் பிரேண் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

    இரண்டு மந்திரிகள் உள்பட 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையில் நடைபெற்ற வன்முறை காரணமாக கலந்து கொள்ளவில்லை.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தொடர், கூட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதில் குகி-சோ எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் 5-வது கூட்டத்தொடர் பிப்ரவரி 28-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை நடைபெற்றது.

    நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்து, தற்போது நிலவும் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பேன். நேர்மறையான முடிவுகள் ஏற்படும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார்.

    ஜிரிபாம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீவைப்பு சம்பவம் குறித்து கூறுகையில் "நான் விசாரணை நடத்தினேன். இரண்டு சமூகத்தினரின் தலைவர்களுடன் பேசினேன். இரண்டு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது வன்முறையை நிலைநிறுத்த முயல்பவர்களின் வேலையாகத் தெரிகிறது" என்றார்.

    கடந்த புதன்கிழமை ஆளில்லா வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் வீடு ஆளில்லாமல் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

    • குகி கிளர்ச்சி குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.
    • மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம்.

    மணிப்பூரில் கடந்த வாரம் ஆறு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குகி கிளர்ச்சிக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்று 7 நாட்களில் ஆறு பேரையும் கொலை செய்தது. இதனால் மணிப்பூரில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பாக அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். மூன்று வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த நிலையில் மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை (mass operation) எடுக்கப்பட வேண்டும். குகி கிளர்ச்சிக்குழுவை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நவம்பர் 14 தேதியிட்ட உத்தரவின்படி AFSPA உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த தீர்மானத்தில் குறிப்பிட்டவை நடைமுறை படுத்தப்படவில்லை என்றால் மணிப்பூர் மக்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் மாநில அரசும் விரைவில் எடுக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த கூட்டத்தில் ஏழு எம்.எல்.ஏ.-க்கள் மருத்துவம் தொடர்பான காரணங்களை கூறி கலந்து கொள்ளவில்லை. 11 எம்.எல்.ஏ.க்கள் காரணம் ஏதும் கூறாமல் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • இன்று முதல் மக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு.
    • மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.

    மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சொந்த இடங்களில் இருந்து வெளியேறினர். இந்த வன்முறைக்கு சுமார் 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த வன்முறை காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு வருகிற 8-ந்தேதி (இன்றுமுதல்) முதல் அனைத்து சாலைகளும் திறக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து 8-ந்தேதியான இன்று மணிப்பூர் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கியது.

    சேனாபதி மாவட்டத்திற்குச் செல்லும் பேருந்து கக்போக்பி மாவட்டத்தின் காம்கிபாய் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குகி போராட்டக்காரர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்புப்படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியதுடன் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.

    குகி பிரிவினர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தனி நிர்வாகம் வேண்டும். அதுவரை சுதந்திரமான நடமாட்டத்தை விரும்பவில்லை என போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு பேருந்து இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    ×