search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிவீர்"

    • அக்னிவீர் விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சி நடக்கிறது.
    • நீங்கள் எப்போது அனுமதி அளித்தாலும், அறிக்கை தர தயாராக இருக்கிறேன்.

    பட்ஜெட் மீதான விவாத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

    அக்னிபாத் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் ராகுல் காந்தி, அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் சேர்ந்த அக்னிவீர் (வீரர்) வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என ராஜ்நாத் நாத் அவையில் தெரிவித்தார். ஆனால், அது இன்சூரன்ஸ் மூலமாக வழங்கப்பட்ட தொகை. இழப்பீடாக வழங்கப்பட்டது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அக்னிபாத் விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கிறார். இது தொடர்பாக விவாதத்தின்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகுந்த பதில் அளிப்பார்.

    நம்முடைய வீரர்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வருகிறார்கள். இது நம்முடைய தேசிய பாதுகாப்பு குறித்த உணர்வுப்பூர்வமான பிரச்சனை. அக்னிவீர் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப முயற்சி நடக்கிறது. நீங்கள் எப்போது அனுமதி அளித்தாலும், அறிக்கை தர தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

    கார்கில் போரின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று [ஜூலை 26] கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பாஜக ஆளும் 5 மாநிலங்கள் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய 5 மாநில முதல்வர்கள் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

     

    இந்த திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு அவர்களை தூக்கியெறியும் வகையில் உள்ளது என்றும், முறையாக பயிற்சி கிடைக்காத அக்னிவீரர்களை, ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தும் சிக்கலும் இதில் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பாஜக ஆளும் 5 மாநில முதல்வர்களும் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

    அதன்படி மாநில அரசின் காவல்துறை மற்றும் மாநிலத்தின் ஆயுதக் காவல் படை [PAC] பணிகளில் ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அரியானாவில் ஆளும் பாஜக அரசு, மாநிலத்தின் காவல்துறை மற்றும் சிறைத்துறை பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×