search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாட்டிலைட்"

    • துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது.
    • பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த முடியும்

    ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

    தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1 [Chamran-1] என்று இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின் [orbital manoeuvre technology] ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் ஈரான் சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தக்கூடும் என்று  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தமுடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

    • 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.
    • பாலத்தின்மீது வாகனம் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் [Pangong Lake] குறுக்கே 400 மீட்டர் பாலத்தைச் சீனா கட்டி முடித்தது. இந்த பலமானது சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியானது கடந்த 1958 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடத்தின்மீது சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிரான நிலைப்பதிலேயே இந்தியா இருந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது நதியைக் கடக்க 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.

     

    பலமானது கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது பாலத்தின்மீது  வாகனங்கள் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பகுதிகளுக்கு சீனா தங்களின் வரைபடத்தில் புதிய பெயர்களை சூட்டியும், எல்லையில் ராணுவ நடவைடிகைகளை அதிகப்படுத்தியும் வருவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    சமீபத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ [ Wang Yi] மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சந்திப்பில் எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 

     

     

    ×