என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரெண்ட்"

    • மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் பிரபலமானவை.
    • இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டாஸ் ஆகியோர் உருவாக்கினார்.

    எக்ஸ், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரண்டிங்கில் இருப்பதை காணலாம்.

    கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    1985 ஆம் ஆண்டு இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா, தயாரிப்பாளர் தோஷியோ சுசுகி ஆகியோரால் ஜிப்லி ஸ்டூடியோ நிறுவப்பட்டது.

    ஸ்பிரிட்டட் அவே (SPIRITED AWAY), மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் ஜிப்லி ஸ்டுடியோவால் உருவாக்கி வெளியிடப்பட்டன.

    இந்த படங்களில் ஜிப்லி ஸ்டூடியோவுக்கென தனி பாணி அனிமேஷன் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜப்பான் அனிமே ரசிகர்களுக்கு பரீட்சயமான பாணி இது.

    இயக்குநர் ஹயாவோ மியாசாகி 

     

    இந்நிலையில் இந்த பாணி தற்போது உலகளவில் டிரண்ட் ஆக தொடங்கியுள்ளது. பிரபலங்கள், அவர்களின் முகிக்யமான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜிப்லி பாணி அனிமேஷனாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பிரபலங்களே தங்கள் அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்து டிரண்ட்டில் இணைந்து வருகின்றனர். 

    • தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள்.
    • எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் டோனி.

    புதுடெல்லி:

    இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது கேப்டனாக செயல்பட்டவர் எம்.எஸ்.டோனி. ஐ.பி.எல். தொடரிலும் சி.எஸ்.கே. அணியை திறம்பட வழிநடத்தி வந்தவர் டோனி. எனவே ரசிகர்கள் இவரை செல்லமாக தல டோனி என அழைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே. அணியின் கேப்டனுமான எம்.எஸ்.டோனியிடம், ரசிகர்கள் தல என அன்பாக அழைப்பதற்கான காரணம் குறித்து தனியார் நிறுவனம் கேள்வி எழுப்பியது. அப்போது அவர் கூறியதாவது:

    சமூக வலைதளங்களில் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால் எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    என் ரசிகர்களை நான் பாதுகாக்க வேண்டிய போதெல்லாம் அதை செய்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள். எனவே நான் யூகிக்கும் எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே இதுவும் இதன் ஒரு பகுதியாகும்.

    எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் சுறுசுறுப்பான சமூக ஊடக பயனராக இல்லாவிட்டாலும், நான் இடுகையிடுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள், அவர்கள் அதை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    ×