என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிராதித்ய சிந்தியா"

    • பட்ஜெட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது.
    • அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விரைவில் 5 ஜி மற்றும் விரிவுபடுத்தப்பட் 4 ஜி சேவைகளை சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது 5 ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா[Jyotiraditya Scindia] பி.எஸ்.என்.எல் 5 ஜியை பயன்படுத்தி வீடியோ கால் சேவையை முதல் முறையாக பரிசோதித்து பார்த்தார். டெல்லியில் உள்ள c-dot  கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

    அந்த வீடியோ காலில் பெண் ஒருவருடன் 5 ஜி சேவையின் செயல்திறன் குறித்து பேசினார். இதன்மூலம் பி.எஸ்.என்.எல் 5 ஜி தொழில்நுட்பத்தின் செயல் திறன் உறுதியாகியுள்ளது என்று ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பகிரப்பட்ட அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    முன்னதாக இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை அதிகரித்து வரும் நிலையில் அனைவரின் பார்வையும் பி.எஸ்.என்.எல் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
    • நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் மத்திய மந்திரி.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

    தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி, நாட்டின் 543 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல்துறை ஆகியவை உறுதிகொண்டுள்ளன என தெரிவித்தார்.

    ×