என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்ரிமோனி"

    • விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
    • பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.

    தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.

    திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

    அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.

    இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.

    போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.

    அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
    • இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப், YouGov உடன் இணைந்து, இந்தியாவில் மேட்ச்மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    சமீப காலமாக இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இந்த ஆய்வில் பதில் அளித்த 78% பெண்கள் போலியான Profile-களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 82% பெண்கள் இதுபோன்ற செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    74% பேர் தங்கள் சுயவிவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • முதல் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை சீமா பெற்றுள்ளார்.
    • விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார்

    கடந்த 10 ஆண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.25 கோடியை செட்டில்மென்ட் என்ற பெயரில் வசூலித்து மோசடி செய்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் நிக்கி (எ) சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை பெற்றார்.

    பின்னர் 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரூ.10 லட்சத்தை செட்டில்மென்டாக பெற்று கொண்டார்.

    இதனையடுத்து அவர் 2023 இல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் அவர் தப்பி சென்றுள்ளார்.

    இதையடுத்து இது தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூர் போலீசார் சீமாவை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசாரின் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. திருமண மேட்ரிமோனி இணையதளங்களில் விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார் என்றும் வெவ்வேறு மாநிலங்களில் பலரை திருமணம் செய்து, பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்துள்ளார்" என்று போலீசார் தெரிவித்தனர்.

    • தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்.
    • அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார்.

    திருமண வரன் தேடும் மேட்ரிமோனி தளத்தில் பெண்களுடன் நட்பு கொண்டு நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹிமான்ஷு ஒரு திருமண தளம் மூலம் பெண்களிடம்  தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி நட்பு  கொள்வார்.

    மேட்ரிமோனியில் நட்பாக பேசி பழகியபின் நேரில் சந்தித்து அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்தார்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 15 பெண்களை அவர் ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது.

    மோசடிக்கு ஹிமான்சு பயன்படுத்திய ஐந்து உயர் ரக தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    ×