என் மலர்
நீங்கள் தேடியது "தாஜ் மகால்"
- சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்தனர்
- கங்கை நீரை ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபையை [ABHM] சேர்ந்த சேர்ந்த சியாம்பாபு சிங், வினேஷ் சவுத்ரி என்ற இரு இளைஞர்கள் தாஜ் மாலின் உள்ளே மும்தாஜ் -ஷாஜகானின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைப் பகுதியில் கங்கை நீரை ஊற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள சுவர்களில் ஓம் ஸ்டிக்கர்களையும் ஒட்டியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்து, கல்லறை அமைந்துள்ள தரைதளத்தின் கதவைப் பூட்டிவிட்டு கங்கை நீரை அங்கு ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது. இதனையடுத்து இருவரையும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூலை30 ஆம் தேதி, மீனு ரத்தோர் எனும் பெண் ஒருவர் 'கன்வார்' ஒன்றை தோளில் சுமந்துகொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்றார். தடுத்து நிறுத்திய காவலர்களிடம், தான் அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர், தாஜ்மஹால் முன்பு தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது என்றும் சிவபெருமான் தன் கனவில் வந்து அவரது கோவிலில் கங்கை நதியின் புனித நீரை தெளிக்க சொன்னார் என்று கூறிய பெண் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், சார்மினார் கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா?
- மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
மசூதியில் கோவில் உள்ளதாக வழக்குப்போடுவது வட மாநிலங்களில் டிரண்ட் ஆகி வரும் நிலையில் செங்கோட்டை, தாஜ் மகால், சார்மினாரையும் இடிப்பீர்களா என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்குள் கோவில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய அதிகாரிகளை மக்கள் எதிர்த்ததால் கலவரம் ஏற்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் பகுதியில் உள்ள மசூதியிலும் ஆய்வு செய்ய சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில் மசூதிகளை சர்வே செய்யும் பணிகளை விமர்சித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் அரசியலமைப்பைக் காப்போம் பேரணியில் பேசிய கார்கே பாஜக 1991 வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினார்.
முஸ்லிம்களால் கட்டப்பட்ட செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், ஐதராபாத் சார்மினார் போன்ற கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.

2022 ஆம் ஆண்டில், ராம் ஜென்மபூமி இயக்கத்திற்குப் பிறகு சங்கம் எந்த ஒரு போராட்டத்தையும் தொடங்க விரும்பவில்லை என்றும் மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
ஆனால் அவர்கள் அதன்படி நடக்கவில்லை. ஆர்எஸ்எஸ் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக ஆர்எஸ்எஸ் சொல்வதை ஏன் கேட்கவில்லை?. 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களின் தற்போதைய நிலையைப் பராமரிக்க 1991ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நீங்கள் அதையும் பின்பற்றவில்லை. மாறாக நீங்கள் அவற்றை மீறுகிறீர்கள். வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டம் ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த மதத் தலங்களின் தன்மையை மாற்றுவதைத் தடை செய்வதை வர சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை நிராகரிப்பது அல்ல, மாறாக அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதைக்கான கிடைப்பதற்காக இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்துவதே ஆகும், நான் பிறப்பால் இந்து, ஆனால் மதச்சார்பின்மையுடன் மத பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.