search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடப் புத்தகங்கள்"

    • 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்களின் விலையை அரசு உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

    * பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பாட புத்தகங்களின் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது.

    * 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி போட்டி தேர்வுக்கு தயாராவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * விலைவாசி உயர்வால் சிரமப்படும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    * அரசு பாடத்திட்டத்தில் பயிலும் தனியார் பள்ளி மாணவரிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

    * பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    * பாட புத்தங்களின் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
    • 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1130க்கு விற்பனையாகிறது.

    தமிழகத்தில் பாடப் புத்தகங்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 1ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.16 உயர்ந்து, ரூ.550க்கு விற்பனையாகிறது. 2ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530க்கு விற்பனையாகிறது.

    3ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620க்கு விற்பனையாகிறது. 4ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650க்கு விற்பனையாகிறது.

    5ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710க்கு விற்பனையாகிறது. 6ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது.

    7ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1200 உயர்ந்துள்ளது. 8ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1000 உயர்ந்துள்ளது.

    9ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது. 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1130க்கு விற்பனையாகிறது.

    • என்.சி.இ.ஆர்.டி.யின் 3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.
    • அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா?

    சென்னை:

    மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

    வெறும் பக்கம் அல்ல...

    இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம்...

    என்.சி.இ.ஆர்.டி.யின்

    3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.

    அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் என்.சி.இ.ஆர்.டி.யின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று தெரிவித்துள்ளார்.

    ×