என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்ட்டாகிராம்"

    • இதை ஏற்று அந்த பெண் டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

    இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் இன்ஸ்டாகிராம் நண்பனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண் கைலாஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு சமீபத்தில் சுற்றுலா வந்துள்ளார்.

    தனது இன்ஸ்டா நண்பன் கைலாஷையும் தன்னுடன் அந்த பெண் அழைத்துள்ளார். ஆனால் கைலாஷ் தான் டெல்லியில் உள்ளதாகவும், அங்கு வருமாறும் பெண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

    இதை ஏற்று அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மாலையில் தனது அறைக்கு கைலாஷை அப்பெண் அழைத்துள்ளார்.

    தனது நண்பன் வாசிம் உடன் வந்த கைலாஷ் ஹோட்டல் அறையில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹோட்டல் லிப்டில் சென்றபோது அங்கு வேலைபார்த்த ஊழியர் ஒருவரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறி அந்த பெண் வசந்த் குஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். கைலாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தாக தெரிகிறது. அவனையும் தொடர்புடையவர்களையும்  கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    தன்னைச் சந்திக்க இந்தியாவுக்கு வருமாறு பெண்ணை அடிக்கடி கைலாஷ் வற்புறுத்தியது தெரியவந்தது. பெண்ணுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.
    • இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பதக்கம் நிராகரிக்கப்பட்ட பின் வினேஷ் போகத் முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார். இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் வினேஷ். தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கும் அவரது படம் அது. வேறு எந்த குறிப்புகள் அன்றி, இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் வினேஷ் போகத். வேறு எந்த வார்த்தைகளும் அந்த படத்திற்கு மேல் வினேஷ் போகத்துக்கு தேவையும் பட்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும். 

    ×