search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்சிபி"

    • தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது.
    • தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று மெகபூபா விமர்சித்துள்ளார்

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18 முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே நேற்றைய தினம் பிரதமர் மோடி காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவது இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும் என்றார்.

    மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் காங்கிரஸ் -என்சிபி கூட்டணியை ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் ஜனநாயக கட்சியின்[பிடிபி] தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு முக்கிய பங்காற்றிய ஷேக் குடும்பத்துக்கு [அபத்துல்லா குடும்பத்துக்கு] மோடி நன்றி தெரிவிக்க வேண்டும். குறிப்பாக ஷேக் அப்துல்லாவின் முயற்சியினால் தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்று தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • இந்த தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம்.

    எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தச் சட்டசபைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம்.

    கடந்த பல தேர்தலில் பா.ஜ.க. உடனான கூட்டணி அனுபவம், அதிக எம்.எல்.ஏ.க்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

    அதனால் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சிக்கு முதல் மந்திரி பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

    மகா விகாஸ் அகாதியின் முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன்.

    காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல் மந்திரி வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்.

    ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மக்கள் விரும்புவது எங்களைத் தான், உங்களை அல்ல என தெரிவித்தார்.

    ×