search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வசந்த் எம்.பி"

    • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு எம்.பி. விஜய் வசந்த் தலைமை ஏற்று நடத்தினார்.
    • இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று, மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகர மேயர் மற்றும் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டம் தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. விஜய் வசந்த் பகிர்ந்துள்ளார். 

    • வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இன்று, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலைக்கடை, கொல்லஞ்சி, நட்டாலம், நல்லூர், விளாத்துறை ஆகிய பகுதிகளில் இன்று வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.

    இதேபோல், தோவாளை செக்கர்கிரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நெடுவிளை அருள்மிகு சிவ சுடலை மாடசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்களுடன் இன்று விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டார்.

    தொடர்நது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் , பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.
    • வசந்த் & கோ நிறுவனம் சார்பில் நடைபெற்றது.

    கன்னியாகுமரியில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வசந்த் & கோ நிறுவனம் சார்பில் 10 , 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, கலந்துகொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    ×