search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்லாபூர் போராட்டம்"

    • மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
    • காவல்துறையை கண்டு மக்கள் மத்தியில் எந்தவித அச்சமும் இல்லை.

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பத்லாப்பூரில் உள்ள மழலையர் பள்ளியில் 2 சிறுமிகள், அந்த பள்ளியின் துப்புரவு பணியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. இந்த நிலையில் அமைதி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று புனேயில் சரத் பவார் மற்றும் மகா விஹாஸ் கூட்டணி கட்சி தலைவர்களி கொட்டும் மழையில் அமைதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது சுப்ரியா சுலே கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையை கண்டு மக்கள் மத்தியில் எந்தவித அச்சமும் இல்லை. நான் இந்த அரசை கண்டிக்கிறேன். போராடியவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என சிலர் சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ன உணர்ச்சியற்ற அரசை ஒருபோதும் பார்த்ததில்லை. குற்றவாளி கைது செய்யப்படும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    • பத்லாபூரில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் பணியாளர்களில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ வைரலானது.

    ரெயில்வே வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தப் போராட்டம் காரணமாக உள்ளூர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பத்லாபூர்வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், பத்லாபூரில் நடந்துள்ள இச்சம்பவம் நடந்துள்ளது நிலைகுலைய வைத்துள்ளது.

    ×