என் மலர்
நீங்கள் தேடியது "வெஸ்ட்இண்டீஸ்"
+2
- தென்ஆப்பிரிக்காவின் ஸ்டப்ஸ் 42 பந்தில் 76 ரன்கள் விளாசினர்.
- நிக்கோலஸ் பூரன் 7 சிக்சர்கள் விளாசி தென்ஆப்பிரிக்கா பவுலர்களை திணறடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரர்கள் ரிக்கெல்டன் (4), ரீஸா ஹென்ட்ரிக்ஸ் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் மார்கிராமுமம் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
டிரஸ்டன் ஸ்டப்ஸ் 42 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பாட்ரிக் க்ருகர் 32 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு 3 விக்கெட்டும், ஷமர் ஜோசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அலிக் அதானஸ், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதானஸ் 30 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்தில் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 65 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டியில் நாளை நள்ளிரவும், 3-வது போட்டி 27-ந்தேி நள்ளிரவும் நடைபெறுகிறது.
முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 1-0 என வெற்றி பெற்றது.
- சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட கடுமையாக முயற்சிக்கும்.
வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இதில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடக்கிறது.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் 3 ஒருநாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அந்த தோல்வியை மறந்து உள்ளூரில் நடைபெறும் இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க ஆயத்தமாகி வருகிறது.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இதுவரை 21 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி 13-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் கண்டு இருக்கிறது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று இருக்கிறது. இதனால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட கடுமையாக முயற்சிக்கும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 217 ரன்கள் குவித்தது.
- மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நவி மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்களைக் குவித்தது. ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார். நடப்பு டி20 தொடரில் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார்.
ஸ்மிருதி மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்னும், ராகவி பிஸ்ட் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி களமிறங்கியது. அந்த அணியின் சினேலி ஹென்றி 16 பந்தில் 43 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியாவின் ராதா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
315 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து களமிறங்கவுள்ளது.
இப்போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
- பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்
- இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
315 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 26.2 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.