search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் மாநிலம்"

    • பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
    • 6 பயங்கரவாதிகள் கைது மூலம் மிகப்பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக டெல்லி போலீசின் சிறப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பிவாண்டி வனப்பகுதிக்கு சென்று அவர்கள் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தீவிர முயற்சியால் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    விமானப்படை நிலையம் அருகே அல்கொய்தா இயக்கத்தினர் முகாம் அமைத்தல் பயங்கரவாத பயிற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

    இதை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளை சிறப்பு படை போலீசார் கைது செய்தார். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை டம்மி ஏ.கே.47, ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    பிடிபட்டவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு நாட்களாக பயிற்சி பெற்று வநதனர்? என்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காட்டுப்பகுதியில் அவர்கள் ஆயுதங்களை மற்றும் தாக்குதல் பயிற்சிகளை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

    ஆயுதப்பயிற்சி எதற்காக நடத்தப்பட்டது, அந்த குறிப்பிட்ட காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? என்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பயிற்சி நடைபெற்ற பகுதி அருகில் இந்திய விமானப்படையின் பயிற்சி மையம் உள்ளதால் வேறு ஏதேனும் சதி திட்டத்தை நடத்த திட்டமிட்டனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆயுத பயிற்சி, 6 பயங்கரவாதிகள் கைது மூலம் மிகப்பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர்.

    ×