என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் டி20 உலகக் கோப்பை 2024"
- ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
- ஓய்வு பெற்ற தியான்ட்ரா டோட்டினிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றிருந்த தியான்ட்ரா டோட்டினிற்கு இடம் கிடைத்துள்ளது.
ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்டேஃபானி டெய்லர், ஷெர்மைன் காம்பெல், ஷமில கன்னெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளுடன், சில இளம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி:
ஹீலி மேத்யூஸ் (கே), ஷெர்மைன் காம்ப்பெல்லே, ஆலியா அலீன், அஃபி பிளெட்சர், அஷ்மினி முனிசார், செடியன் நேஷன், சினெல்லே ஹென்றி, டியான்ட்ரா டோட்டின், கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன், கியானா ஜோசப், ஷமிலா கானல், ஸ்டேஃபானி டெய்லர், ஜைடா ஜேம்ஸ்.
- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கடும் சவாலாக இருக்கும்.
- எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இது ஆஸ்திரேலிய அணிக்கும் நன்கு தெரியும்.
மும்பை:
9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்.4-ந்தேதி மோதுகிறது. தொடர்ந்து 6-ந்தேதி பாகிஸ்தானையும், 9-ந்தேதி இலங்கையையும், 13-ந்தேதி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய பெண்கள் அணியின் கேப்டன் 35 வயதான ஹர்மன்பிரீத் கவுர் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோப்பையை தட்டித்தூக்குவதே எங்களது பிரதான இலக்கு. ஒரு அணியாக அதற்காகத் தான் முயற்சிக்கிறோம். உலகில் எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்போதும் அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் நாட்டுக்காக கோப்பையை வென்று கொண்டுவர வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு. அதை இந்த தடவை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இறுதி சுற்றை நெருங்கி வந்து தோல்வி கண்டோம். இந்திய அணிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அது முக்கியமான தருணங்களில் ஜொலித்து கோப்பையை வெல்வது வரை எடுத்து செல்லும்.
அணி குறித்து பேச வேண்டும் என்றால், சில வீராங்கனைகள் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். அணியில் தங்களுக்குரிய பங்களிப்பு என்ன என்பது அவர்களுக்கு தெரியும். நமது அணி மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பைக்கு செல்லும் மிகச்சிறந்த இந்திய அணி இது தான் என்று சொல்ல முடியும். எல்லா வகையிலும் போட்டிக்கு தயாராகி உள்ளோம்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கடும் சவாலாக இருக்கும். எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இது ஆஸ்திரேலிய அணிக்கும் நன்கு தெரியும். தங்களை ஒரு அணியால் வீழ்த்த முடியும் என்றால் அது இந்தியா தான் என்பதை ஆஸ்திரேலியர்கள் அறிவார்கள்.
என்னை பொறுத்தவரை பல உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் உள்ளது. 19 வயதில் எப்படி ஆடினேனோ அதே உத்வேகத்துடன் இப்போதும் விளையாட விரும்புகிறேன். துபாய், சார்ஜாவில் ஆடும் போது அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருகை தந்து உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.
- 9-வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.
துபாய்:
இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 9-வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.
மொத்தம் நடக்கும் 23 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.114 மட்டுமே. ரூ.340, ரூ.570, 910 விலைகளிலும் விற்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான சொகுசு டிக்கெட் ரூ.15,930 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. இணையதளத்தில் மட்டுமின்றி மைதானத்தில் உள்ள கவுண்ட்டரிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும். ஒரே நாளில் 2 ஆட்டம் நடக்கும் போது, ஒரு டிக்கெட்டை பயன்படுத்தி இரு ஆட்டத்தையும் கண்டுகளிக்கலாம் என்றும், புதிய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் போட்டியை நேரில் காண அனுமதி இலவசம் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார்.
- இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.
சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
- அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர்.
- லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.
சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 19.2ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
- ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன் எடுத்தார்.
- நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.
- இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன.
துபாய்:
9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.
அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும். இலங்கையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா, தீப்திசர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 31 ரன் வித்தியாசத்திலும், 2-து போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவுஇல்லை.
முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. ஸ்காட்லாந்து 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.
- இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டியது முக்கியம்.
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் சந்தித்ததில் 4 ஆட்டத்தில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இலங்கையும் வென்று இருப்பதும் இதில் அடங்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்னும் லாரா வோல்வார்ட் 40 ரன்களும் எடுத்தனர். நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோராகும்.
இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- மந்தனா, கவுர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
- 50 ரன்னில் மந்தனா ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசி தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் அவுட் ஆன அடுத்த பந்தே ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரை சதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.
- 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
- இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது.
10 அணிகள் இடையிலான 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் (ஏ பிரிவு) மோதியது.
இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது.
இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது. ஏ பிரிவில் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் கடைசி லீக்கில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி 2-வது அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.
பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும். அதாவது இந்திய அணியின் தலைவிதி இப்போது பாகிஸ்தான் கையில் உள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இனி எங்கள் கையில் எதுவும் இல்லை. எங்களுக்கு இன்னொரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்' என்றார்.
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜா:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடைசி வரை போராடிய கேப்டன் கவுரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக வெற்றி பெற்று அசத்தி உள்ளது. மேலும், ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.