search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவனி லெகரா"

    • இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.
    • துப்பாக்கிச் சுடுதலில் இன்று அவனி லெகரா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடந்த பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா 7வது இடம் பிடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

    இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அவனி லெகரா 420.6 புள்ளிகள் எடுத்து 5-வது இடம்பிடித்தார். இதன்மூலம் பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

    ஏற்கனவே, துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.
    • துப்பாக்கிச் சுடுதலில் இன்று அவனி லெகரா மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா 7வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    ஏற்கனவே, துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது.
    • பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், துப்பாக்கிச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும், பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற மணீஷ் நர்வாலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி இரு பதக்கங்களைப் பெற்றது.
    • அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் பெற்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர்.

    பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×