என் மலர்
நீங்கள் தேடியது "தவெக மாநாடு"
- விஜய் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
- விஜய் மாநாட்டை நடத்துவதற்கு திருச்சி, மதுரையில் ஏற்கனவே இடம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.
இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்டமான முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் மாநாட்டை நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கலெக்டரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 28-ந் தேதி அன்று மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், துணை சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விஜய் மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி உள்ளதா? மாநாட்டுக்கு அனுமதி அளித்தால் போக்குவரத்து பாதிக்கப்படுமா? என்பது பற்றியெல்லாம் ஆலோசித்தனர்.
விஜய் மாநாட்டுக்கு 1½ லட்சம் பேர் வர வாய்ப்புள்ளதாக அனுமதி கேட்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதைவிட அதிகம் பேர் வருவதற்கே வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். அதே நேரத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இடத்தை தேர்வு செய்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதனால் விஜய் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற காரணங்களால் விக்கிரவாண்டியில் விஜய் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, விஜய் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்பட்டுள்ள மனுவை பரிசீலனை செய்து வருகிறோம். விரைவில் முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பழனியிடம் கேட்ட போது, அதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முடிவெடுத்து அறிவிப்பார் என்றார்.
விஜய் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இடத்தையும் சுத்தம் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு நடத்தப்படவில்லை.
இதுபோன்ற சூழலில்தான் விஜய் மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் நிச்சயம் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விஜய் மாநாட்டை நடத்துவதற்கு திருச்சி, மதுரையில் ஏற்கனவே இடம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘வி.சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'வி.சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்கள். அவரும் பதில் கடிதம் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, வக்கீல் அரவிந்த் ஆகியோரிடம் வழங்கினார்.
- இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!
- விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.
கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024). மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு. நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.
தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!
இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.
விரைவில் சந்திப்போம்!!
வாகை சூடுவோம்!!
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
- அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டம்.
- விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக, மீண்டும் அனுமதி கேட் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி, பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று வெளியிட்டிருந்த நிலையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும்.
- பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும்.
சென்னை:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றிய விபரம் வருமாறு:-
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும். எந்த வகையிலும் நமது கட்சி தலைவர் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் தொண்டர்களும் நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு தயாராகி வருவோர் ஆங்காங்கே தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விதிகளை பின்பற்றி மிகவும் பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும்.
மாநாட்டில் மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு தனியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
- காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம்:
தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மாநாட்டில் நிறுத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாடுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகள், வக்கீல்களுடன் சென்று மனு அளித்திருந்தார். மாநாடு நடத்துவதற்கு 33 நிபந்தனைகளை காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டு அனுமதிக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில் மாநாடு நடைபெறும் நாளன்று தீயணைப்பு வாகனம் பாதுகாப்பிற்கு நிறுத்த விக்கிரவாண்டி தீயனைப்பு நிலையத்திலும் ஆம்புலன்ஸ் நிறுத்த முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், சாலைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம், ரெயில்வே நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் தயார் செய்து வருவதால் காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
- தொகுதிக்கு 5 பொறுப்பாளர்களை நியமித்து மாநாட்டிற்கு கட்சியினரை அழைத்து வர முடிவு.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான தீவிர பணியில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
அதற்காக, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், அணித்தலைவர்கள் வருகை தந்ததனர்.
தொகுதிக்கு 5 பொறுப்பாளர்களை நியமித்து மாநாட்டிற்கு கட்சியினரை அழைத்து வர ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, ஒவ்வொரு தொகுதிக்குமான 5 பொறுப்பாளர்கள் யார் என தேர்வு செய்வதற்காக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொறுப்பாளர்கள் நியமனம், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன ? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
- ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிலிருந்து புறப்படும் தமிழக வெற்றிக் கழக தொண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டகளை விடுத்துள்ளார்.
இதுவரை நூற்றுக்கணக்கான வானங்களின் ஆவணங்கள் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வானங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும், மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆணை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
- மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
- மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாடு தொடர்பாக மாவட்ட தலைவர்களை சந்தித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மாநாட்டுக்கு மாவட்ட வாரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்காக மாவட்டம், வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநாட்டுக்கு தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவெண் விவரங்கள் கட்சி தலைமை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால் நடும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்குகிறது.
மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது. போதுமான அளவு கழிவறை, உணவருந்தும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் 3 வழிப்பாதைகள் அமைக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவுடன் கூடிய வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
- மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.
த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.
முதல் மாநாடு நினைவாக, 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் நட திட்டமிடப்பட்டுள்ளது. புயல், மழையை தாங்கும் வகையில் விண்ட் வெலாசிட்டிக்கு ஏற்ப கொடிக்கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது.
தொடர்ந்து, வரும் 27ம் தேதி மாநாடு தொடங்கும் முன், திடலின் எதிரே 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.
- பொருளாதார குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
- குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுக்கான பணிகளை உடனே தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநாட்டுக்கான களப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் மாநாட்டு பணிகளுக்கென ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் செயல் வடிவ குழுக்கள் அமைக்கப்படுகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள குழு தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மாநாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜய் அமைத்துள்ள மாநாட்டு குழுவில், ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஒரு ஒருங்கிணைப்பாளர், 12 குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர பொருளாதார குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
மாநாட்டு வரவேற்பு குழுவில் 10, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் 14, சுகாதார குழுவில் 55 பேர், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவில் 104 பேரும், வாகன நிறுத்த குழுவில் 41 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மகளிர் பாதுகாப்பு குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த பாதுகாப்பு மேற்பார்வை குழுவில் மாவட்ட தலைவர்களை ஒருங்கிணைப்பாளர்களாக கொண்டு 111 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேடை ஒருங்கிணைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, மாநாட்டு தீர்மான குழு, உபசரிப்பு குழு, பந்தல் அமைப்பு குழு, உணவு வழங்கல் குழுவினர் என 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுக்கான பணிகளை உடனே தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சட்ட நிபுணர்கள் குழுவினர், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவினர் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யவேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
- மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
- மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கொடியை நிரந்தரமாக பறக்கவிட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து உள்ளார். இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது மேடை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதையடுத்து அதன் உள்புறம் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. நேற்று மாநாட்டு திடலில் முளைத்துள்ள செடிகள் மீண்டும் முளைக்காத வகையில் அவற்றின் மீது களைக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டன. மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு செல்லாத வகையில் அங்கு இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அங்குள்ள திறந்த நிலையில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் பெரிய இரும்பு கர்டர்கள் அமைத்து அதை முழுமையாக மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முகப்பு வாயில் ஜார்ஜ் கோட்டை போன்று பிரமாண்ட வடிவில் அமைக்கப்பட உள்ளது.

மாநாட்டில் வாகனம் நிறுத்தும் இடத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரகுமார் குப்தா ஆய்வு செய்த காட்சி.
அவ்வப்போது மழை பெய்து இடையூறு ஏற்படுத்தினாலும் மாநாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். இதற்காக கொடிக்கம்பம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மாநாடு முடிந்தாலும் அந்த கம்பத்தில் கொடி நிரந்தரமாக பறந்திட வி.சாலையை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான அந்த நிலம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த தனியாருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விழுப்புரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆய்வு செய்தார். கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் எந்த இடத்தின் வழியாக உள்ளே நுழைந்து, எங்கே எந்தெந்த வாகனங்கள் நிற்கிறது என்ற விவரத்தை கட்சியின் வக்கீல் அரவிந்தனிடம் கேட்டறிந்தார்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், த.வெ.க. மாவட்டத் துணைத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.