search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வங்கதேசம் தொடர்"

    • இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிப்பு.

    இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் (நாளை) தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, இந்தியா- வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

    அதன்படி, டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    F,G,H அப்பர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    I,J,K லோயர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    KMK டெர்ரேஸ் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    • செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த ஆடுகளம் பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்.

    சென்னை சேப்பாக்கத்தில் செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்.

    கருமைநிற ஆடுகளம் தான் சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். ஆனால் சென்னையில் கடுமையான வெப்ப நிலை காணப்படுவதால் ஆடுகளம் சீக்கிரமாக சிதைவதற்கு வாய்ப்பு உண்டு.

    அவ்வாறான சூழலில் சுழற்பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் கண்ணோட்டம்:

    இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் ஸ்டேடியமாகும். 1934-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி முதல் முறையாக இங்கு நடந்தது.

    கடைசியாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது 3 ½ ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறும் 35-வது டெஸ்டாகும்.

    இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 15-ல் வெற்றி பெற்றது. 7 டெஸ்டில் தோற்றது. 11 போட்டி 'டிரா' ஆனது. ஒரு டெஸ்ட் 'டை' ஆனது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 1986-ம் ஆண்டு மோதிய போட்டி, 'டை' யில் முடிந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டாகும். வெளிநாட்டு அணிகளில் இங்கிலாந்து அதிகபட்சமாக 11 டெஸ்ட் சேப்பாக்கத்தில் விளையாடி உள்ளது. வங்காளதேச அணி முதல் முறையாக இங்கு ஆடுகிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 1977-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.

    கவாஸ்கர் 12 டெஸ்டில் விளையாடி 1018 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 3 சதம் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக டெண்டுல்கர் 970 ரன் (10 டெஸ்ட்) எடுத்துள்ளாா்.

    ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் எடுத்தவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கருண் நாயர் 303 ரன் (2016, இங்கிலாந்துக்கு எதிராக) எடுத்து இருந்தார். இந்த இருவர் மட்டுமே சேப்பாக்கத்தில் டிரிபிள் செஞ்சூரி அடித்தவர்கள் ஆவார்கள். டெண்டுல்கர் அதிகபட்சமாக 5 சதம் அடித்துள்ளார்.

    கும்ப்ளே 48 விக்கெட் (8 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்பஜன்சிங், 42 விக்கெட்டும், கபில்தேவ் 42 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    வினோ மன்காட் 55 ரன் எடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். ஹிர்வாணி 16 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறப்பான நிலையாகும்.

    • களத்தில் தகராறில் ஈடுபடுவது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி கலகலப்பாக பேசியுள்ளனர்.
    • இந்த தொடர் இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடராகும்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த தொடர் இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடராகும்.

    இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக கம்பீர் மற்றும் கோலி கலகலப்பான நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருவரும், ஐபிஎல் தொடரின் போது பலமுறை வாக்குவாதங்களில் ஒருவருக்கொருவர் மோதி கொண்டதை காணலாம். ஆனால் தற்போது ஒரே அணியில் பயிற்சியாளராக கம்பீர் மற்றும் வீரராக விராட் கோலி இந்திய அணியில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர்.

    இருவரும் பயிற்சியின் போது சகஜமாக பேசிக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் களத்தில் தகராறில் ஈடுபடுவது குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி கலகலப்பாக பேசியுள்ளனர். இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

    விராட் கோலி: நீங்கள் பேட்டிங் செய்யும்போது, எதிரணியினருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்போதாவது களத்தை விட்டு வெளியே சென்று அவுட் ஆகலாம் என நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அது உங்களை அதிக உந்துதலுக்கு உள்ளாக்கியதா?

    கவுதம் கம்பீர்: என்னை விட உங்களுக்கு அதிக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். அந்த கேள்விக்கு என்னை விட சிறப்பாக பதில் சொல்ல உங்களால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.

    விராட் கோலி (சிரிக்கிறார்): நான் சொல்வதை ஒத்துக்கொள்ளும் ஒருவரைத் தான் தேடுகிறேன். தவறு என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம் யாராவது சொல்ல வேண்டும், ஆம் இப்படித்தான் நடக்கும்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.



    • உண்மையிலேயே உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் ஊக்கமடைகிறோம்.
    • இந்த தொடரில் எங்களால் கடும் சவால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

    சென்னை:

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியையொட்டி வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் அது இந்திய தொடரை எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. இதனால் எங்கள் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். ஆனால் நெருக்கடியை கவுரவமாக கருதுகிறோம். இது எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும். அதே சமயம் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம். பலம், பலவீனம், எங்களது எல்லை எது என்பதை புரிந்து வைத்துள்ளோம். ஆனால் உண்மையிலேயே உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் ஊக்கமடைகிறோம். இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது கிரிக்கெட்டில் இப்போது மிகப்பெரிய சவாலாகும். எனவே சிறந்த அணிகளுக்கு எதிராக ஆடும் போது உங்களது அணி எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். அதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளோம்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசனும், மெஹிதி ஹசன் மிராசும் பேட்டிங்கிலும் பலம் சேர்க்கக் கூடியவர்கள். சுழற்பந்து வீசுவதுடன் தரமான பேட்ஸ்மேன்களாகவும் உள்ளனர். சதமும் அடித்திருக்கிறார்கள். இரு விக்கெட் கீப்பர்கள் லிட்டான் தாஸ், முஸ்தாபிஜூர் ரகுமான் எங்களது பிரதான பேட்டர்களாக உள்ளனர். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். இந்த தொடருக்கு எங்களது அணியின் கலவை மிகவும் நன்றாக இருக்கிறது. இது, இந்த தொடரில் எங்களால் கடும் சவால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

    ஆடுகளத்தை பார்ப்பதற்கு நல்ல போட்டிதரக்கூடிய ஒன்றாக இருக்கும் போல் தெரிகிறது. ஆனால் இந்திய துணை கண்டத்தில் ஆடுகளத்தை கணிப்பது எளிதல்ல. முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்புமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர்.
    • நல்ல புரிதல்தான் முக்கியம். அது கம்பீரிடம் இருக்கிறது.

    இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் வித்தியசமாக யுக்தியை கொண்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல புரிதல்தான் முக்கியம். கம்பீரிடம் அது இருக்கிறது.

    நாட்டிற்காக விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இது ஆஸ்திரேலியா தொடருக்கான ஆடை ஒத்திகை அல்ல.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
    • முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று சென்னை வந்துள்ளது.

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று சென்னை வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது இந்திய அணியுடன் புதிய பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்துள்ளார். 

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயரும் இணைந்துள்ளார். இருவரும் முதல் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

    • இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • நாளை முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

    இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், பும்ரா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    வங்கதேச அணியினர் வரும் 15-ம் தேதி டாக்காவில் இருந்து சென்னை வருகிறார்கள்.

    • பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது.
    • அந்த தொடரில் இடம் பெற்ற வீரர்களில் சொரிபுல் மட்டும் விலகி உள்ளார்.

    சென்னை:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை வங்கதேசம் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக சொரிபுல் இஸ்லாம் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான வங்கதேசம் அணி விவரம்:-

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்.

    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் 19-ந் தேதி தொடங்குகிறது.
    • 2-வது டெஸ்ட் போட்டிக்கு கான்பூரில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் அணி இந்தியா வரவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் 27-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் கான்பூரில் நடக்கும் போட்டியை நடத்த விடாமல் போராட்டம் நடத்த உள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதற்கு திட்டமிட்டப்படி போட்டி எந்தவித எதிர்ப்பும் இன்றி நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிசிசிஐ திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் முன்பு அறிவித்தபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
    • நாளை முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகிறார்கள். அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    வீரர்கள் தனித்தனியாக இன்று இரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி டாக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.

    • முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வருகிற 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (செப்டம்பர் 9) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ. 1000-இல் துவங்குகிறது. அதிகபட்ச விலை ரூ. 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. 

    ×