என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப் பிரதேசம"

    • சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
    • கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.

    உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.

    அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.

    இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே மோதல் ஏற்பட்டது
    • இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறி சண்டையில் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு செல்லும் புதிய வந்தே பாரத் ரெயில் இந்த வார ஆரம்பத்தில் செப்டம்பர் 2[திங்கள் கிழமை] தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ரெயிலை மேற்கு மத்திய ரெயில்வே, வட மேற்கு ரெயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன் லோகோ பைலட்களும் ரெயிலை இயக்க உத்தரவு வந்த நிலையில் தினமும் யார் ரெயிலை இயக்குவது என்பதில் இந்த மூன்று டிவிஷன் ரெயில் லோகோ பைலட்கள் இடையே தினமும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஆக்ரா மற்றும் கோட்டா ரெயில்வே டிவிஷன் லோகோ லோகோ பைலட்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடுமையான சண்டை மூண்டுள்ளது.

    இதில் ஒரு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தாக்கப்பட்டு அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டது. மேலும் கார்டு ரூமின் போட்டு உடைக்கப்பட்டு கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் பிரச்சனைக்கு இன்னும் ரெயில்வே தீர்வு காணவில்லை என்று தெரிகிறது. 

    ×