என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான கடத்தல் பீதி"

    • கத்திக்குத்தில் காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • விமானம் போலீஸ் ஹெலிகாப்டர் உதவுயுடன் பத்திரமாக தரை இறங்கியது.

    கொரோசல்:

    மத்திய அமெரிக்காவின் கரீபியன் கடலின் வடக்கு பகுதியில் பெலிஸ் நாடு உள்ளது. இங்கு மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள கொரோசல் என்ற நகரத்தில் இருந்து சுற்றுலா தளமான சான் பெட்ரோசுக்கு ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 14 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் பயணம் செய்தனர்.

    நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதில் சென்ற அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து விமானத்தை கடத்த போவதாக தெரிவித்தான். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அவன் விமானி மற்றும் 2 பயணிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதை பார்த்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள்.

    அப்போது கத்திக்குத்தில் காயம் அடைந்த பயணி ஒருவர் வலியை பொறுத்துக்கொண்டு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபரை நோக்கி சுட்டார். இதில் அவன் விமானத்தில் சுருண்டு விழுந்து இறந்தான்.

    அவனின் இந்த மிரட்டலால் விமானம் நடுவானில் சுமார் 2 மணி நேரம் திசை மாறி வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது. பின்னர் கடலோர நகரமான லேடிவில்லில் அந்த விமானம் போலீஸ் ஹெலிகாப்டர் உதவுயுடன் பத்திரமாக தரை இறங்கியது.

    உடனடியாக கத்திக்குத்தில் காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    போலீசார் நடத்திய விசாரணையில் விமானத்தை கடத்தியவன் அகின் யேலா சாலா டெய்லர் என்பது தெரியவந்தது. எதற்காக அவன் விமானத்தை கடத்த முயன்றான் என தெரியவில்லை. அவன் விமானத்தில் கத்தியுடன் எப்படி ஏறினான் என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நல்ல வேளையாக அவனை பயணி ஒருவர் சுட்டுக்கொன்றதால் மற்ற பயணிகள் கத்திக்குத்தில் இருந்து தப்பினார்கள். இதனால் பெரும் விபரீதம் நடைபெற இருந்தது தடுக்கப்பட்டது.

    • அரசுமுறை பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
    • அங்கு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    ஜெனீவா:

    அரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி-814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மந்திரி ஜெய்சங்கர் அளித்த பதிலளித்து கூறியதாவது:

    இந்த வெப் தொடரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் என் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    1984-ம் ஆண்டிலும் ஒரு விமான கடத்தல் நடந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தை காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் துபாய்க்கு கடத்தினர்.

    அப்போது இளம் அதிகாரியாக இருந்த நான் இந்திய வெளியுறவு துறையின் கையாளும் குழுவில் ஒருவனாக இருந்தேன். மொபைல் போனில் என் அம்மாவை அழைத்து, 'விமானத்தை கடத்தியுள்ளனர். என்னால் வீட்டுக்கு வரமுடியாது' என கூறினேன்.

    அதன்பின், கடத்தப்பட்ட விமானத்தில், என் தந்தையும் இருப்பதைக் கண்டுபிடித்தேன். இது ஒரு பெரிய கதை.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒருபுறம் கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்தேன். மறுபுறம், விமானக் கடத்தல் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தேன் என தெரிவித்தார்.

    ×