என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2025 ஏலம்"

    • கொல்கத்தாவில் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
    • கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. முன்னதாக மாலை 6 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்க விழாவும் இடம் பெறுகிறது. ஆனால் அன்றைய தினம் கொல்கத்தாவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி மாலை 3.30 மணிக்கு இதே கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த ஆட்டத்தை கொல்கத்தாவில் வேறு தேதியில் நடத்த வழியில்லாததால், அதே தேதியில் கவுகாத்திக்கு மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    • வளைகுடா நகரமான தோஹா அல்லது அபுதாபியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
    • சவுதி அரேபியாவும் ஏலத்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் 18-க்கான ஏலம் நவம்பரில் 3-வது அல்லது 4-வது வாரத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஏலம் துபாயில் நடந்ததை போலவே, இந்த முறையும் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வளைகுடா நகரமான தோஹா அல்லது அபுதாபியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

    மேலும் சமீப காலமாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக முதலீடுகளை செய்து வரும் சவுதி அரேபியாவும் ஏலத்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இடம் குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.

    தக்கவைப்பு விதிகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம். அதாவது ஏலத்திற்கான திட்டத்தைச் செய்ய அணிகளுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும். அணிகள் தங்கள் தக்கவைப்பை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 15-க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    மும்பை:

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தான முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்க இருக்கிறது.

    முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.

    ஆர்டிஎம் கார்டுகளை எத்தனை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியது. இதில் பங்கு பெற்ற அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறினர். எனினும் பெரும்பாலான அணிகள் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மூன்று வீரர்களை ஆர்.டி எம் கார்டு வைத்து மீண்டும் வாங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.ஆனால் இதற்கு சில அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ காலம் தாழ்த்தி வந்தது.

    இந்த சூழலில் இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் முன்னணி வீரர்கள் வெறும் ஐந்து வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும் என்ற எண்ணிக்கையையும் பிசிசிஐ இறுதிச் செய்ய உள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த ஐந்து வீரர்களில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் அல்லது ஐந்து வீரர்களுமே உள்ளூர் வீரராக இருக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மெகா ஏலத்திற்கு முன்பு வெறும் ஐந்து வீரர்களை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். ஆர்டிஎம் வசதி கிடையாது என்ற அறிவிப்பு வெளியானால் அது சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு அது பெரிய இடியாக வந்து விழும்.

    பிசிசிஐ யின் இந்த முடிவுக்கு ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
    • ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும்.

    மும்பை :

    ஐபிஎல் 2025-ம் ஆண்டிற்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25-ம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். கடந்த ஐபிஎல் மெகா ஏலம் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது.

    ஐபிஎல் மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ குழு தற்போது சவுதி அரேபியாவுக்கு சென்று எந்த இடத்தில் நடத்துவது, சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

    நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தான் ஒளிபரப்பு செய்யப்படும்.

    அதே வேலையில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள். இதனால் தேதியை மாற்ற டிஸ்னி நிறுவனம் கோரிக்கை விடுக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும்.

    இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
    • ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி ரீடெய்ன் செய்துள்ளது. ஒரு ரிடம் கார்டுடன் ஏலத்திற்கு அந்த அணி செல்ல உள்ளது.

    ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

    • ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது .
    • முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட்டுக்கே உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. 2024 ஐபிஎல் போட்டியில் கவுதம் கம்பீர் பயிற்சி அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன

    ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

    இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கை தற்போது 574 ஆக குறைக்கப்பட்டு இறுதி கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

    இறுதி கட்ட பட்டியல் விவரம், 

    கேப்டு இந்திய வீரர்கள் - 48

    கேப்டு வெளிநாட்டு வீரர்கள் - 193

    இணை நாட்டு வீரர்கள் - 3

    அன்கேப்டு இந்திய வீரர்கள் -318

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கல் இன்றைய முதல் நாள் ஏலத்தில் unsold ஆகி இருக்கிறார். இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    இதே போன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. முதல் நாள் ஏலத்தில் இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் போயினர். இதற்கு மாறாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏலம் போகாததும் அரங்கேறியிருக்கிறது.

    • ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • முதல் நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:

    ஜெட்டா:

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

    முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:

    நூர் அகமது 10 கோடி

    ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி

    டேவன் கான்வே 6.25 கோடி

    கலீல் அகமது 4.8 கோடி

    ரச்சின் ரவீந்திரா 4 கோடி

    ராகுல் திரிபாதி 3.4 கோடி

    விஜய் சங்கர் 1.2 கோடி

    • 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
    • 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் என்பவர் நடத்தி வருகிறார்.

    மும்பையைச் சேர்ந்த கலை சேகரிப்பாளரான மல்லிகா சாகர், அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பிரைன் மாவ்ர் கல்லூரியில் கலை வரலாறு பட்டப்படிப்பை படித்தார்.

    2021 புரோ கபாடி லீக் வீரர்களின் ஏலத்திற்கான ஏல மேலாளராக மல்லிகா சாகர் பணியாற்றினார். பின்னர் 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.

    2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை நடத்திய மல்லிகா, ஐபிஎல் மெகா ஏலத்தை தற்போது நடத்தி வருகிறார்.

    இதற்கு முன்னதாக ரிச்சர்ட் மேட்லி மற்றும் ஹியூ எட்மீட்ஸ் போன்றவர்கள் ஏலத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஞ்சி போட்டியில் அரியானா அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் விளையாடி வருகிறார்.
    • ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அசத்தினார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்-ஐ 3.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அண்மையில், ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிக பட்சமாக ரிஷப் பண்டை எல்.எஸ்.ஜி. அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • வைபவ் சூர்யவன்ஷி (13 வயது) ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார்.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.

    இதனை தொடர்ந்து ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. 2 நாட்களில் 182 வீரர்களுக்காக 639.15 கோடியை 10 அணி உரிமையாளர்கள் செலவிட்டுள்ளனர்.

    அதிக பட்சமாக ரிஷப் பண்ட் (ரூ. 27 கோடி, எல்.எஸ்.ஜி.), ஷ்ரேயாஸ் அய்யர் (ரூ. 26.75 கோடி, பஞ்சாப்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி, கே.கே.ஆர்) ஆகிய மூவரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார். ராஜஸ்தான் அணி அவரை ரூ 1.10 கோடிக்கு வாங்கியது.

    சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விலைக்கு யுஸ்வேந்திர சாஹல் ஏலம் போனார். ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

    ஏலத்தின் 2-வது நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் ரூ. 10.75 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஆர்சிபி தட்டி தூக்கியது. 

    • மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஒரு மறைமுக பதிவை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது.

    அந்த மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? எந்த அணிகள் பலமாக திகழும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

    அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்ற குஜராத் டைட்டம்ஸ் அணி கடந்த ஆண்டு சுப்மன் கில்லை அந்த அணியின் கேப்டனாக நீடிக்க வைத்தது.

    இந்நிலையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு மறைமுக குறிப்பில், எ நியூ ஸ்லேட் (A New Slate), எ நியூ ஸ்டோரி (A New Story) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர்கள் ஏதோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது தெரிய வந்தது.

    அதிலும் குறிப்பாக அந்த பதிவிற்கு கீழ் ரஷீத் கானின் புகைப்படத்தையும் அவர்கள் பதிவிட்டுள்ளதால் சுப்மன் கில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    ஏனெனில் சுப்பன் கில்லை தக்க வைத்த விலையை விட கூடுதல் விலை கொடுத்து அந்த அணி ரஷீத் கானை தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக ரஷீத் கான் அவர்களிடம் ஏதாவது நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை மட்டுமே கேப்டன்சி செய்துள்ள ரஷீத் கான் அந்த இரண்டு போட்டிகளிலுமே கேப்டனாக தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோன்று அந்த இரண்டு முறையும் அவர் கேப்டனாக இருந்ததும் குஜராத் அணிக்காக மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

    ஒட்டுமொத்தமாகவே சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் பிரான்ச்சைசி டி20 கிரிக்கெட்டில் 67 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள ரஷித் கான் 34 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×