என் மலர்
நீங்கள் தேடியது "பண்ணாரி அம்மன் கோவில்"
- கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
- அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில்.
இக்கோவிலுக்கு ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்ப ரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாைர தப்பட்டை மீனாட்சி வாத்தி யத்துடன் அம்மன் பாரம்ப ரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடை பெற்றது.
தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும் காலை குண்டத்திற்கு தேவையான வேப்பம் ஊஞ்ச மர கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம் இக்கரை நகமும் புதூர் மற்றும் வெள்ளியம்பாளை யம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.
பின் வரிசையில் காத்தி ருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்ட னர். இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமி கள் உள்ளிட்ட லட்சக்க ணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கும் தெய்வமே... என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவு க்கு பக்தி கோஷம் எழுப்ப ப்பட்டது.
இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.
இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனை தொட ர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறங்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரி அம்மனை வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் கோவில் வளா கத்தை சுற்றி தயார் நிலை யில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.
குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் 15-ந் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரத தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.
குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு கோபி கோவை புளியம்பட்டி சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப் பட்டன.
அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்ய ப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படா மல் பக்தர்கள் குண்டம் இறங்கி சென்று பண்ணாரி அம்மனை வழிபட கோவில் சார்பில் அனைத்து ஏற்பாடு களும் தீவிரமாக செய்ய ப்பட்டது.
இதையொட்டி வன த்துறையினரும் வனப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
- கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.
மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து அம்மனை வழிபட்டு கோவில் வளாகத்தில் உள்ள குண்டத்தில் உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் போட்டு வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.
குறிப்பாக கர்நாடக மாநில எல்லையை யொட்டிய பகுதியில் கோவில் அமைந்து உள்ளதால் அந்த மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து அம்மனை வழிபடுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் உள்பட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் கூட்டம் காரணமாக வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் தரிசனத்துக்கு வருபவர்களும் வெயிலால் சிரமம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து பக்த ர்களின் சிரமத்தை தவி ர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் உப்பு குண்டத்தை சுற்றி தரைக்கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கோவில் வளாகத்தில் நகரும் நிழற்குடைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடைகள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் போது அவர்கள் வசதிக்காக பயன்படுத்தப்படும். வெயில் மற்றும் மழை காலங்களில் பக்தர்களின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் வரவழைக்கப்பட்டுள்ளது.
- சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
- மழை காலம் தொடங்கியுள்ளதால் விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்பொழுது சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திம்பம் மலைபாதை பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை ரோட்டை கடப்பதும், சாலையோரம் நடமாடுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பண்ணாரி அம்மன்கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் திடீரென சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது:- பண்ணாரி அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும், இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம், தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
இதனால் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளுக்கு எந்தவொரு தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.