என் மலர்
நீங்கள் தேடியது "சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம்"
- 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவனத்தில் தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளனர். செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் என அனைத்து கட்சித் தலைவர்களும் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஏராளமான வழித்தடங்களில் பஸ் நிறுத்தப்பட்டு உள்ளன.
- ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் கூறியதாவது:-
தமிழகத்தில் போக்கு வரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்வதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதிநெருக்கடியில் இருந்துவருகின்றன. பஸ் மூலம் உத்தேசமாக ரூ.100 வசூலானால் அதில் ரூ.12-ஐ வங்கியில் இருந்து பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது.
தினமும் ஒரு கோடி கி.மீ இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தற்போது 80 லட்சம் கி.மீ. மட்டுமே இயக்கப்படுகின்றன. அதாவது, ஏராளமான வழித்தடங்களில் பஸ் நிறுத்தப்பட்டு உள்ளன.
வாரிசு வேலை மறுப்பது: பஸ் எண்ணிக்கையைக் குறைப்பது என அ.தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசாணைகளை தி.மு.க. அரசு தீவிரமாகச் செயல் படுத்தி வருகிறது. எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதுடன், மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.
பணியில் இருந்து ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, ஓய்வு பெறும் அன்றே ஓய்வு கால பலன், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல் படுத்துவதுடன், காலிப் பணியிடங்களைப் நிரப்ப வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும்.
ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.