என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ்"
- நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- சென்னை அணிகள் மோதின.
- இந்த போட்டியில் சிஎஸ்கே சீட்டிங் செய்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் சென்னை அணி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சென்னை அணி சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு போட்டியின் டாஸ் போடும் போது சொந்த மைதானத்தின் கேப்டன் டாஸ் சுண்டுவதும் எதிரணி கேப்டன் எதனை (H or T) தேர்வு செய்வார் என்பதை மைக்கிலும் கூறி வருவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பு தோனி ரிஷப் பண்ட் தோளில் தட்டிக் கொடுப்பார். அதன் பிறகு டாஸ் போடும் போது மைக்கில் கூறாமல் அருகில் இருந்த போட்டி நடுவரிடம் மட்டுமே தோனி கூறுவார்.
தோனி கேட்டது டைல் என மைக்கில் கூறப்பட்டது. டாஸில் ஹெட் இருந்தது. ஆனால் தோனிதான் டாஸ் வென்றதாக கூறப்பட்டது. இன்னோரு முக்கியமான விஷயாமாக, டாஸ் சுண்டியதும் நான் தான் டாஸ் வெல்வேன் என்பது போல ரிஷப் பண்ட்டிடம் தோனி ஜாலியாக விளையாடுவார். ஜாலியாக இருந்தாலும் இத்தனை விஷயங்கள் நடக்கும்போது சிறிது சந்தேகம் ஏற்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பலர் தோனிக்காக இந்த போட்டியை விட்டுக்கொடுத்தது போல இருந்ததாகவும் சிலர் விளக்கத்துடன் கூறி வருகின்றனர்.
கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின்படி 2020 முதலே தோனி ஸ்பின்னுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 94 தான் வைத்துள்ளார். வேகப்பந்து வீச்சை ஏன் கொடுத்தீர்கள். தோனிக்கு ஸ்பின் பந்து வீச்சை ஆட வரவில்லை என்றால் ஸ்பின்னைத்தானே கொடுக்க வேண்டும், அதுதானே லாஜிக் என தெரிவித்து வருகின்றனர்.
- புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
- புள்ளிப்பட்டியலில் மும்பை 9ம் இடத்தில் உள்ளது
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இதனையடுத்து, தொடர் தோல்விகளால் துவண்டு கிடைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குச் சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 9ம் இடத்தில் உள்ளது.
- இந்த சீசனில் சிஎஸ்கே பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
- கான்வே, ரச்சின் ரவிந்திரா அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர்.
ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் கிடைத்தது. 2ஆவது ஓவரில் 4 ரன்களே கிடைத்தது. அடுத்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. இதனால் 4 ஓவரில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தது.
4ஆவது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் கான்வே ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்த ஓவரில் ரன்ஏதும் கிடைக்கவில்லை.
5ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். இவர் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து விஜய் ஷங்கர் களம் இறங்கினார். 3ஆவது பந்தில் விஜய் ஷங்கர் கொடுத்த எளிதான கேட்சை சுனில் நரைன் பிடிக்க தவறினார். இதனால் விஜய் ஷங்கர் டக்அவுட்டில் இருந்து தப்பினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
பவர்பிளேயில் கடைசி ஓவரான 6ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் 2 பவுண்டரி அடித்தார். இதனால் 13 ரன்கள் கிடைத்தது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மேலும், சிஎஸ்கே பளர்பிளேயில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதனால் சிக்சர் இல்லாத பவர்பிளேயாக அமைந்தது.
- 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகள் மோதிய 11 ஆட்டங்களில் 8-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிகரமாக தொடங்கிய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. இதில் சொந்த ஊரில் அடைந்த 2 தோல்வியும் அடங்கும்.
முல்லாப்பூரில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 201 ரன்கள் எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை அணி இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது. இருப்பினும் அவர்களால் இன்னும் சரியான அணி கலவையை அடையாளம் காண முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. கடந்த 5 ஆட்டங்களில் 12 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டுள்ளனர். அது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே பீல்டிங்கில் வெகுவாக முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகி இருப்பதால் எஞ்சிய தொடருக்கு மூத்த வீரர் டோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ஷிவம் துபே நம்பிக்கை அளிக்கிறார்கள். இருந்தாலும் தொடக்கம் முதலே வலுவான ஷாட்கள் மூலம் ரன் வேகத்தை அதிகரிக்கும் துடிப்பான பேட்ஸ்மேன்கள் இல்லை. மிடில் வரிசையும் பலவீனமாக தெரிகிறது. டோனி களத்தில் நின்றும் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை.
பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா, ஆர்.அஸ்வின் ஓரளவு நன்றாக பந்து வீசுகிறார்கள். ஆனால் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு (5 ஆட்டத்தில் 85 ரன் மற்றும் 2 விக்கெட்) மெச்சும்படி இல்லை. இதனால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.
3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்த கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் போராடி தோற்றது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 239 ரன் இலக்கை தூரத்திய கொல்கத்தா 234 ரன் எடுத்து வெற்றியை நெருங்கி கோட்டை விட்டது.
கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, வெங்கடேஷ் அய்யர், ரகுவன்ஷி, ரிங்கு சிங் நல்ல பார்மில் உள்ளனர். விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ராஜஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற 4 ஆட்டங்களில் 20 ரன்னை கூட தொடவில்லை. இதே போல் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் போதிய பங்களிப்பு அளித்தால் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தங்களுக்குரிய நாளாக அமைந்தால் மிரட்டி விடுவார்கள்.
மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், 3-வது வெற்றியை குறி வைத்து கொல்கத்தாவும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் சுழல் தாக்குதலை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகள் மோதிய 11 ஆட்டங்களில் 8-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, பதிரானா.
கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், மொயீன் அலி அல்லது ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை.
- 2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மீண்டும் எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருதுராஜ் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.
2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
- சேப்பாக்கத்தில் நாளை சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகிறது.
- சென்னை அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல இந்தமுறையும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் ராயுடு விளையாடியுள்ளார்.
- 2023-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை அம்பதி ராயுடு பெற்றுக்கொள்ளுமாறு தோனி கேட்டுக்கொண்டார்.
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 மூன்று இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அணி 9-வது இடத்தில் உள்ளன. சிஎஸ்கே பேட்டிங் கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை முடித்து கொடுக்கும் தோனி கடந்த சில போட்டிகளில் அதனை செய்யமுடியவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் விளையாடிய ராயுடு, அணிக்கும் தோனிக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்மறையான செய்திகள் பரவி வந்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன், இருப்பேன் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியுள்ளார்.
இது குறித்து ராயுடு கூறியதாவது:-
நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அது பற்றி கவலையில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட மாற்றம் நிகழப்போவதில்லை.
எனவே தயவுசெய்து பணம் செலுத்திய பி.ஆர்-களில் பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். பல ஏழை மக்கள் பயனடையலாம்.
என அம்பதி ராயுடு கூறினார்.
- சென்னை சூப்பர்கிங்ஸ் இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி விட்டது.
- ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சென்னை:
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.
ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 4-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது
சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி.யிடம் (சேப்பாக்கம்) 50 ரன்னிலும், ராஜஸ்தானிடம் (கவுகாத்தி) 6 ரன்னிலும், டெல்லி கேப்பிட்டல்சிடம் (சேப்பாக்கம்) 25 ரன்னிலும், பஞ்சாப்பிடம் (நியூ சண்டிகர்) 18 ரன்னிலும் தொடர்ச்சியாக தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது போட்டியில் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இங்கு நடக்கும் 4-வது போட்டியாகும்.
தொடர்ந்து 4 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்கே. அதில் இருந்து மீண்டு வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது.
சென்னை சூப்பர்கிங்ஸ் இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி விட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெற்றி வரை நெருங்கினாலும் தோல்வியால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சி.எஸ்.கே. வீரர்கள் அதிரடியாக ஆடுவது அவசியம். தோனி அளவுக்கு கூட மற்ற பேட்ஸ்மேன்களால் சிக்சர்களை வெளிப்படுத்த இயலவில்லை. மற்ற அணிகளில் இருப்பது போல இளமையான அதிரடியாக ஆடக்கூடிய வீரர் தான் அணிக்கு தேவை. இல்லையென்றால் தற்போது இருக்கும் வீரர்கள் அதிரடியாக விளையாடுவது மிகவும் அவசியமாகும்.
நாளை போட்டியிலாவது வெற்றியை தேடி தரமாட்டார்களா? என்ற ஆதங்கத்துடன் சி.எஸ்.கே.வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
கொல்கத்தா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது.
6-வது இடத்தில் உள்ள அந்த அணி ராஜஸ்தான் (8 விக்கெட்), ஐதராபாத் (80 ரன்) ஆகியவற்றை வென்றது. பெங்களூரு (7 விக்கெட்), மும்பை (8 விக்கெட்), லக்னோ (4 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது. அந்த அணி சென்னையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கொல்கத்தா அணியில் கேப்டன் ரகானே, வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியையொட்டி பார்வையாளர்கள் மெட்ரோ ரெயிலில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்.
ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டின் குறியீட்டை தானியங்கி எந்திரத்தில் ஸ்கேன் செய்து ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் செல்லலாம்.
- சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன.
- சிஎஸ்கே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தச் சூழலில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. மும்பை அணி 8-வது இடத்திலும், சிஎஸ்கே அணி 9-வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
இதனால், சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன. இந்த ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். அப்படி ஏழு போட்டிகளில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியின் புள்ளிகள் 16 என்ற அளவை எட்டும். ஆனால், தற்போது சிஎஸ்கே இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இது மிகவும் கடினமாகத் தெரிகிறது.
- தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
- இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிஎஸ்கேவின் செயல்பாடுகளில் நிச்சயம் எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஏலத்தின் முடிவிலும் சிஎஸ்கே அணி பலமான வீரர்களை தேர்வு செய்து, தங்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து பிளேயிங் லெவனை தயார் செய்வார்கள்.
பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஆனால் தற்போது சிஎஸ்கே அணி தடுமாறுவதை பார்க்கும் போது இது சிஎஸ்கே போல் தெரியவில்லை. நான் சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் வீரர்களிடம் உங்களுடைய பணி இதுதான் என்று ஒருவருக்கு ஒவ்வொரு ரோலை கொடுத்து விடுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம்.
ஆனால் இந்த ஏலம் முடிந்த பிறகும் சிஎஸ்கே அணியின் சில குறைகள் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய சிஎஸ்கே போராடி வருகிறது.
சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நன்றாக தெரியும். அது பிளெமிங் ஆக இருக்கட்டும், தோனியாக இருக்கட்டும் ஒட்டுமொத்த அணியுமே வெற்றி பாதைக்கு எப்படி திரும்புவது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.
என்று வாட்சன் கூறியுள்ளார்.
- நடப்பு ஐ.பி.எல். போட்டியில் மும்பை, சென்னை அணிகள் வழக்கத்திற்கு மாறாக தகிடுதத்தம் போடுகின்றன.
- இந்த அணிகள் எஞ்சிய தங்களது 9 லீக்கில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
நடப்பு ஐ.பி.எல். போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வழக்கத்திற்கு மாறாக தடுமாறி வருகின்றனர். 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் தலா 4 தோல்விகளுடன் கடைசி 3 இடங்களில் பரிதாபகரமாக உள்ளன.
இந்த அணிகள் எஞ்சிய தங்களது 9 லீக்கில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். 3 முறை சாம்பியனான கொல்கத்தாவும் பின்தங்கியே இருக்கிறது.
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து காணலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகள் (3 வெற்றிகள்) பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி (+1.257) முதலிடத்திலும், குஜராத் (+1.031) 2-வது இடத்திலும், பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் (+0.289) 4-வது இடத்திலும், லக்னோ (+0.078) 5-வது இடத்திலும் உள்ளனர்.
கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் 2 வெற்றியுடன் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா (-0.056) 6-வது இடத்திலும், ராஜஸ்தான் (-0.185) 7-வது இடத்திலும் உள்ளன.
கடைசி 3 இடங்களில் முறையே முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் (-0.010) 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (-0.889) 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (-1.629) 10-வது இடத்திலும் உள்ளன.
ஆரஞ்சு நிற தொப்பி:
அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் (288 ரன்கள்) தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்
1. நிக்கோலஸ் பூரன் - 288 ரன்கள்
2. மிட்செல் மார்ஷ் - 265 ரன்கள்
3. சூர்யகுமார் யாதவ் - 199 ரன்கள்
4. சாய் சுதர்சன் - 191 ரன்கள்
5. ரகானே - 184 ரன்கள்
ஊதா நிற தொப்பி:
அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை சென்னை அணியின் நூர் அகமது (11 விக்கெட்டுகள்) தன்வசம் வைத்துள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்:
1. நூர் அகமது - 11 விக்கெட்டுகள்
2. கலீல் அகமது - 10 விக்கெட்டுகள்
3. ஹர்திக் பாண்ட்யா - 10 விக்கெட்டுகள்
4. முகமது சிராஜ் - 9 விக்கெட்டுகள்
5. மிட்செல் ஸ்டார்க் - 9 விக்கெட்டுகள்
- பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
- சென்னை அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்கு பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் மாஸ்டர் பட விஜய் புகைப்படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.