என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசைவாணி"

    • கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.

    இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஒரு மதத்தினரை பிற மதத்தினர் இழிவுபடுத்துவதையும் நிச்சயமாக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.
    • பிரிவினைகளுக்கு ஒட்டுமொத்தமாக மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி அல்ல.

    திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய நிகழ்ச்சியில், கானா பாடகி இசைவாணி பங்கேற்றார். அப்போது அவர், சபரிமலை ஐயப்பசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சியின் மாநில மகளிரணி தலைவி சுசிலா தேவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆட்சியை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்று ஆட்சி செய்பவர் நம்முடைய முதல்வர்.

    எந்த மதத்தினரை இழிவுபடுத்துவதையும், ஒரு மதத்தினரை பிற மதத்தினர் இழிவுபடுத்துவதையும் நிச்சயமாக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.

    ஐயப்பன் பாடல் விவகாரம் தொடர்பாக நேற்று புகார் அளித்துள்ளதாக பத்திரிகை வாயிலான அறிந்து கொண்டேன்.

    சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மதத்தால் இனத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க முடியாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

    பிரிவினைகளுக்கு ஒட்டுமொத்தமாக மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி அல்ல. அனைரும் சமம் என்பது தான் இந்த ஆட்சியின் கொள்கை. அதே நேரத்தில் சட்டத்தை மதிக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. சட்டப்படி இந்து சமய அறநிலையத்துறையின் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம்.

    டைரக்டர் தங்கர்பச்சான் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய பேச்சின் ஒலிநாடாவை தருகிறேன். கடந்த ஆண்டு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பேரி ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் தங்கர் பச்சான் புகழ்ந்த புகழ் இதுவரையில் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருக்கிற பேச்சாளர்கள் கூட பேசி இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு புகழ்ந்தவர். இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    • பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது.

    முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.

    அதன்பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில், "முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், "கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

    மேலும், திருமாவளவன் கூறியதாவது:-

    மதத்தை அல்லது மத உணர்வுகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாடப்பட்ட பாடல் அல்ல. ஐயப்பன் துஇருக்கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்கிற சர்ச்சை எழுந்தபோது, ஒரு பெண்ணியக் குரலாக அந்த குரல், பெரியாரின் குரலாக அந்த குரல் இசையாக வெளிவந்து இருக்கிறதே தவிர அதில் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தக்கூடியதாக இல்லை.

    அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டில் இதை பெரிதுப்படுத்துகிறார்கள்.

    அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது. அவற்றை எல்லாம் திசைத்திருப்பவே இதுபோன்ற சிறு பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள் என்று கருதுகிறேன். அது ஏற்புடையது அல்ல.

    இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்லுவது பொறுத்தமானது அல்ல. அது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தை பா.ஜ.க தவறான முறையில் பயன்படுத்துகிறது.

    இந்த தேசம் அதானி, அம்பானிக்காக இருக்கிறதா? பா.ஜ.க அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை.

    நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

    அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஓட்டுப் பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் பா.ஜ.க. அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தமிழ் மொழி, திருக்குறள் பற்றி பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடஓலை முறையை நடைமுறைபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இசைவாணி 5 ஆண்டுகள் முன்பு ஐயப்பன் பாடல் ஒன்றை பாடி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.

    இசைவாணி தவறாக பாடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் அவர் ஒரு மொழியையும், இனத்தையும் இழிவு படுத்தி பேசியிருந்தார். இசைவாணி பாடிய பாடல் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை. நானும் இந்து தான். நானும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். வேண்டுமென்றே பெரிதுபடுத்தி வருகிறது.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் முன்னேறி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாடகி இசைவாணி, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர், தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். வாராகி மந்திராலயத்தின் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள், கல்லாறு அகத்தியர் பீடத்தின் சுவாமிகள் சரோஜினி மாதாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்ப சுவாமி குறித்தும், ஐயப்ப பக்தர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் கல்ச்சுரல் கிளப் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    ×