என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடர்"

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 205 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 40.2 ஓவரில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நகர்வா 48 ரன்னும், சிக்கந்தர் ராசா 39 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் பைசல் அக்ரம், ஆகா சல்மான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை பாகிஸ்தான் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே துல்லியமாக பந்து வீசி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் அணி 21 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ஜிம்பாப்வே அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஜிம்பாப்வே சார்பில் முசரபானி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.

    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18.2 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வென்றது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் ஆட்டக்காரர் சயீம் அயூப் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சயீம் அயூப் 62 பந்தில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 சமனிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சயீம் அயூப் தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 303 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 204 ரன்கள் எடுத்து தோற்றது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடரில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணி தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமனிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. கம்ரன் குலாம் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 50 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ரசா, ரிச்சர்ட் நரவா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசி விக்கெட்களை இழந்தனர்.

    கேப்டன் கிரெய்க் எர்வின் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 40.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.

    இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கம்ரான் குலாமும், தொடர் நாயகனாக சயீம் அயூபும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ×