என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேசம் வன்முறை"

    • மாநில அரசின் ஒருபக்க சார்பும் நடவடிக்கைகளும் துரதிர்ஷ்டவசமானது.
    • ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் வன்முறை குறித்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், மாநில அரசின் ஒருபக்க சார்பும், அவசர நடவடிக்கைகளும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாவட்ட அல்லது மாநில நிர்வாகம், அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல் உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடவடிக்கையை மேற்கொண்டு, ஏற்கனவே இருக்கும் சூழலை மேலும் சீர்குலைத்து மோதலை உண்டாக்கி, மக்கள் உயிரிழக்க வழிவகுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்து-முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவையும், பாகுபாட்டையும் உருவாக்கவே பா.ஜ.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. மாநிலத்தின் அல்லது நாட்டின் நலனுக்கோ அல்ல. இந்த விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மசூதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    • நிடாவின் புகார் தொடர்பாக மொராதாபாத் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாஹி பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடந்தது. மேலும் மசூதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்நிலையில் மெராதாபாத்தை சேர்ந்த நிடா என்ற பெண், சம்பாலில் நடைபெற்ற சம்பவத்தில் போலீசாரின் செயலை பாராட்டியதற்காக அவரது கணவர் முத்தலாக் (விவாகரத்து) கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக நிடா தனது கணவர் எஜாசுல் மீது அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் ஒரு திருமணத்திற்காக சம்பல் பகுதிக்கு செல்ல வேண்டியது இருந்தது. மேலும் எனக்கு அங்கு சில தனிப்பட்ட வேலைகளும் இருந்தன. இதனால் நான் அங்கு செல்வது பாதுகாப்பானதா என்று சம்பல் சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்து கொண்டிருந்தேன்.

    அப்போது எனது கணவர் ஏன் வீடியோவை பார்க்கிறாய் என கேட்டார். மேலும் இதை தவறு என கூறிய அவர் நீங்கள் போலீசாரின் செயலை ஆதரிக்கிறீர்கள் எனக்கூறி என்னிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கினார். மேலும் இனி உன்னை வைத்திருக்க மாட்டேன் என கூறியோடு முத்தலாக் (விவாகரத்து) என தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிடாவின் புகார் தொடர்பாக மொராதாபாத் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×