என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசரநிலை சட்டம்"

    • பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
    • தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்

    தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தி உள்ளார்.

    பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில் எதிர்க்கட்சிகள் வடகொரிய கம்யூனிச சக்திகளுடன் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டி அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலப்படுவதாகத் தேசிய ஊடகத்தில் தோன்றி நாட்டு மக்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் கொரியாவில் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அதிபர் யூன் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

     

    இந்நிலையில் திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கும் தேச விரோத சக்திகளை அகற்றவும், நான் இதன் மூலம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை, குற்றச்சாட்டுகள்,விசாரணைகள் மற்றும் நீதியிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை முடக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

     

    இந்த திடீர் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும்  பாதிப்புகள் குறித்த அச்சத்தில் தென் கொரிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது.
    • கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷியா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்பு, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்பான்களை அமைத்தனர்.

    எனினும், உறுப்பினர்களை வரும்படி எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்ததுடன், அவசரநிலை அறிவிப்பை நீக்குவதற்காக வாக்களித்தனர். இந்த சூழலில், தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே (இந்திய நேரப்படி அதிகாலை 1.15 மணி) உரையாற்றினார். அப்போது அவர், அவசரநிலையை வாபஸ் பெறும்படி சில நிமிடங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.


    அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறியுள்ளார்.

    இதற்கு முன், யூன் சுக்கின் அவசரநிலை அறிவிப்புக்கு அந்நாட்டின் மிக பெரிய, கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 12 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கொரியாவின் மிக பெரிய தொழிலாளர் அமைப்பான அதன் தலைவர் கிம் ஜின் யூக் கூறும்போது, சட்டவிரோத அவசரநிலை உத்தரவை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் கூடியிருக்கிறோம். அதிபருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

    இந்த முட்டாள்தன செயலை அவர் செய்கிறார் என என்னால் நம்பவே முடியவில்லை என கூறினார். இந்த சூழலில், அதிபரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், அவசரநிலை அறிவிப்பை அதிபர் யூன் சுக் இயோல், முழுமையாக நீக்கும் வரை இந்த நிலையே தொடரும் என அந்நாட்டின் அரசியல் வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    • அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது
    • நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

    சியோல்:

    தென் கொரியாவில் கடந்த 3-ந்தேதி அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார்.

    பாராளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், அவசரநிலை முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும் அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் பிறப்பித்த ராணுவ சட்டத்தை பாராளுமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ அவசரநிலையை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.

    இதற்கிடையே தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இத்தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    300 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். இன்னும் 8 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. யூன் சுக் இயோலுக்கு எதிராக அவரது கட்சியின் தலைவரே உள்ள நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இந்த நிலையில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறியதாவது:-

    அவசரகால ராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு ராணுவச் சட்டப் பிரகடனம் இருக்குமா என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

    அதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். இந்தப் பிரகடனத்தால் ஏற்படும் எந்தவொரு சட்ட மற்றும் அரசியல் பொறுப்புச்சிக்கல்களையும் நான் தவிர்க்க மாட்டேன்.

    எனது பதவிக்காலம் உள்பட நாட்டை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்ற முடிவை எனது கட்சிக்கே விட்டு விடுகிறேன். நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு நான் தலை வணங்குகிறேன். மக்களுக்கு நான் ஏற்படுத்திய ஏதேனும் கவலைகளுக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    சியோல்:

    தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    ×