என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொருக்குப்பேட்டை"

    • ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதி
    • 45 நிமிடங்களுக்கும் மேலாக கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தம்.

    சென்னையில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக ஆந்திராவிற்கு தினமும் பல ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்டதால் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் 45 நிமிடங்களுக்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதனால் ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரெயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதியடைந்தனர்.

    ரெயில்வே போலீசார் விசாரணை செய்யும் போது, பயத்தில் வட மாநில இளைஞர் இறங்கி ஓடிவிட்டதாக பெட்டியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்

    • மழை பெய்யும் போது இந்த சாலை படுமோசமாக மாறி விடுகிறது.
    • தினந்தோறும் வாகன ஓட்டிகள் அவ்வழியே சாகச பயணம் செய்து வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை எழில் நகர் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இதைச் சுற்றி எழில் நகர், எம்.ஜி.ஆர்.நகர், கார்நேசன் நகர், குமரன் நகர், அஜீஸ் நகர், சந்திரசேகர் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இங்கு ரெயில் போக்குவரத்துக்காக தினமும் 20 முறைக்கு மேல் ரெயில்வேகேட் மூடப்படுவது வழக்கம். அப்போது வாகனத்தில் செல்பவர்கள் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்து சென்று வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமம் இன்றி ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல எழில் நகரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2023-ம் தொடங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேம்பாலப்பணி நடந்து வரும் நிலையில் அதன் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் சாலை முழுவதும் பல்லாங்குழிபோல் காட்சி அளிக்கின்றன. மழை பெய்யும் போது இந்த சாலை படுமோசமாக மாறி விடுகிறது.

    இதனால் சர்வீஸ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தினந்தோறும் வாகன ஓட்டிகள் அவ்வழியே சாகச பயணம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கொருக்குப்பேட்டை சர்வீஸ் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளங்கள் எங்கு உள்ளது என்பது தெரியாமல் திணறியபடி ஓட்டி செல்கிறார்கள். இதனால் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்றனர்.

    • மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

    ராயபுரம்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த 6-ந்தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.

    கே.வி.குப்பம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது ஹேமராஜ் என்பவர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரெயிலில் இருந்து கீழே தள்ளவிட்டார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்தது.

    இதைத்தொடர்ந்து ரெயிலில் செல்லும் பணிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் படி, ரெயில்வே ஐ.ஜி. பாபு, சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விரைவு ரெயில் மற்றும் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகளிர் பெட்டியில் தனிநபராக பயணம் செய்யும் சூழ்நிலை இருந்தால் மற்ற பெட்டியில் சக பயணிகளோடு பயணம் மேற்கொள்ளவும், மர்ம நபர்கள் யாரேனும் தவறாக நடக்க முயற்சி செய்தால் ரெயில் பெட்டியில் உள்ள அவசரநிலை செயினை பிடித்து இழுக்கவும், அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

    ×