என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிஸ்பேன் ஆடுகளம்"

    • இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.
    • கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து பிட்ச் பராமரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறுகையில், 'ஒவ்வொரு முறையும் இந்த ஆடுகளத்தை நல்ல வேகத்துடன், பவுன்ஸ் இருக்கும் வகையிலேயே தயாரிக்கிறோம். கப்பா ஆடுகளம் என்றாலே வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வேகமும், பவுன்சும் இருக்கும் என்பதை அறிவார்கள். அந்த பாரம்பரிய தன்மை மாறாமல் அப்படியே இந்த முறையும் அமைக்க முயற்சிக்கிறோம்.

    பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எல்லாவற்றுக்கும் ஏற்றது போல் இருக்கும் என நம்புகிறேன். கடந்த இரு நாட்கள் இங்கு மழை பெய்துள்ளது. ஆனால் போட்டிக்கு 3 நாட்கள் இருப்பதால் அதற்குள் ஆடுகளத்தை சரியான முறையில் தயார் செய்து விடுவோம் ' என்றார்.

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
    • இந்த போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் விளையாடிய போலண்ட்டுக்கு பதிலாக ஹசில்வுட் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அந்த அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சுந்தர் 2 விக்கெட்டும் 29 ரன்கள் விளாசினார். ஆனால் அஸ்வின் 2-வது டெஸ்ட்டில் பேட்டிங், பந்து வீச்சில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவருக்கு பீல்டிங்கில் தடுமாறுவதாலும் அவருக்கு பதில் சுந்தரை ஆடும் லெவனில் எடுக்க வாய்ப்புள்ளது.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து வேகத்துடன் நன்கு பவுன்சும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2-வது டெஸ்ட்டில் ஹர்சித் ரானா விக்கெட்டுகளை வீழ்த்த கஷ்டப்பட்டார். மேலும் ரன்களை வாரி வழங்கினார். இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    • ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.

    அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டத்தின் 13-வது ஓவரை ஆகாஷ்தீப் வீசியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 19 ரன்னும், மெக்ஸ்வீனி 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் , முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. 15 ஓவர்களுக்கு கீழ் வீசப்பட்டதால் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    ×