என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை ஏரிகள்"
- பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
- உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 12-ந் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 16, 500 கன அடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கடந்த 2 நாட்களாக படிப்படியாக ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1810 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2749 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 33.76 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது.
- மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 21 அடி ஆகும். 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி முழு கொள்ளவை எட்டியது. பின்னர் மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 196 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏற்கனவே புழல் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து இருந்த நிலையில் தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
இன்று காலை நில வரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 20.91 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3222மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 209 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்ட உள்ளது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடியில் 22.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3248 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது.