search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்னி அரசு"

    • மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.
    • நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "பெண் ஒடுக்குமுறை என்பது யுகம் யுகமாக எல்லாச் சமூகங்களிலும், எல்லாப் பண்பாடுகளிலும் நிலவி வந்த ஒரு சமூக அநீதி. இந்தச் சமூக அநீதிமுறை இன்னும் இந்தப் பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை.

    எமது சமூகக் கட்டமைப்பில் பெண்ணினம் மிகவும் மோசமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்டு நிற்கிறது. மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதார வாழ்வு ஒரு புறமும், அரச அடக்குமுறை அழுத்தங்கள் மறுபுறமும், ஆணாதிக்கக் கொடுமைகள் இன்னொரு புறமுமாகப் பல பரிமாணங்களில் எமது பெண்கள் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார்கள்.

    நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்த மூட நம்பிக்கைகளும், இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தோற்றம் கொண்ட சமூக வழக்குகளும், சம்பிரதாயங்களும், எமது பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றன. ஆணாதிக்க அடக்குமுறையாலும், வன்முறையாலும், சாதியம், சீதனம் என்ற கொடுமைகளாலும் தமிழீழப் பெண்ணினம் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறது.

    எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றுத் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. எமது மண்ணின் விடுதலை, பெண்ணின் விடுதலைக்கு மட்டுமன்றி எமது இனத்தின் விடுதலைக்கும் அத்திவாரமானது"

    -அனைத்துலக பெண்கள் தினத்தில் 1992 ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் விடுத்த அறிக்கையிலிருந்து…

    பெண்கள் விடுதலை குறித்து மேதகு பிரபாகரன் பார்வை தனித்துவமானது. அதனால் தான் பெண்கள் படையணியை 1985 ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் மேதகு பிரபாகரன். ஆனால் சீமான் நேற்று (28.2.2025)மட்டும் கொடுத்த பேட்டிகளை பார்த்தால் எவ்வளவு ஆணாதிக்க சிந்தனை உள்ளவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். பொது வெளியில் பெண்களை இவ்வளவு இழிவாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.

    தான் செய்த பாலியல் சம்பவங்களை பெருமையோடு Normalize பண்ணுகிறார். அருவருப்பான உடல் மொழியோடும் அநாகரீகமான உரையாடலை தொடரும் சீமானை மாதர் சங்கங்கள் மற்றும் #meetoo என்ற பெயரில் இயங்குபவர்கள் இதுவரை கண்டிக்கவில்லை.

    மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.

    நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

    அதிலும் விசாரணைக்கு மேதகு பிரபாகரன் படத்தோடு வந்திருப்பது எத்தனை கொடுமையான அயோக்கியத்தனம்?

    தமிழ்த்தேசியத்தின் அரசியல் இது தானா?

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

    வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்றார் பாரதி.

    இன்று தமிழ்த்தேசியத்தின் பெயரில் அதுவும் மேதகு பிரபாகரன் பெயரில் பெண்களை இழிவுபடுத்துவதும் அதை பெருமைப்படுத்துவதும் அருவருப்பின் உச்சம். அமைதி காப்பது அதனினும் உச்சம் என்று கூறியுள்ளார். 



    • கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான்.
    • முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை.

    கடந்த சில மாதங்களாகவே தி.மு.க.-வுக்கும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. முதலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று திருமாவளவன் முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதையடுத்து திருமாவளவன் பேசிய வீடியோவை ஆதர் அர்ஜூனா பதிவிட்டு இருந்தார்.

    இதை தொடர்ந்து 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாவும் இதனால் தவெக- விசிக இடையே கூட்டணி உறுதியாகிறது என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தவிர்த்தார்.



    இதை அடுத்து புத்தக வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா பங்கேற்று மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதவ் அர்ஜூனா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறினார். 

    இப்படி சர்ச்சைகளில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மீண்டும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் இருக்க வேண்டும். அதற்கு கூடுதலான இடங்களை கேட்டுப்பெற வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதையே தான் அனைத்து தோழர்களும் விரும்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.

    இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் நாங்கள் முடிவு செய்வோம். முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை. அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை.

    ஏற்கனவே எங்களுக்கு 10 தொகுதி கொடுத்துள்ளார்கள். அது இரட்டை இலக்கம் தான். 12 தொகுதி வரை நாங்கள் 2011-ல் பேசி தவிர்க்க முடியாத காரணங்களால் அதை 10 என்று இறுதி செய்தோம். ஆகவே எங்களுடைய எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றபோது அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை மேற்கொள்வோம். திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்போம் என வன்னி அரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தற்போது 25 தொகுதிகள் வரை வேண்டும் என்று கூறுவது தி.மு.க.வு.க்கு அழுத்தத்தை தருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  

    ×