என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதிகா ராவல்"

    • மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரதிகா 78 ரன்கள் எடுத்தார்.

    இலங்கையில் நடைபெறும் மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார்.

    இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

    முன்னதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ராவல் அரை சதம் அடித்ததன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அந்த வகையில் மகளிர் ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 500 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார்.

    முதல் 8 போட்டிகளில் 40(69), 76 (86), 18 (23), 89 (96), 67 (61), 154 (129), 50 (62), 78 (91) அவர் 5 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.

    அதிவேக 500 ரன்கள் குவித்த வீராங்கனைகள் விவரம்:-

    பிரதிகா ராவல் - 8 இன்னிங்ஸ் (இந்தியா)

    சார்லோட் எட்வர்ட்ஸ் - 9 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)

    நிக்கோல் போல்டன் - 11 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)

    பெலிண்டா கிளார்க் - 12 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)

    வெண்டி வாட்சன் - 12 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)

    மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    188 - தீப்தி சர்மா vs IRE-W, போட்செஃப்ஸ்ட்ரூம், 2017

    171* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs AUS-W, டெர்பி, 2017

    154 - பிரதிகா ராவல் vs IRE-W, ராஜ்கோட், 2025

    143* - ஹர்மன்ப்ரீத் கவுர் vs ENG-W, கேன்டர்பரி, 2022

    138* - ஜெயா சர்மா vs PAK-W, கராச்சி, 2005

    • முதல் விக்கெட்டுக்கு மந்தனா- பிரதிகா ஜோடி 110 ரன்கள் குவித்தது.
    • மந்தனா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

    இந்நிலையில் 16 ஓவரின் போது பிரதிகா அடித்த பந்து லெக் திசையில் சென்றது. முதலில் ஒரு ரன் என்பது போல இந்த ஜோடி பாதியில் வேகமாக ஓடி இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தது. அப்போது பிரதிகா 2-வது ரன் எடுக்க முடியாது என தெரிந்து வேண்டாம் என தெரிந்து மந்தாவை வேண்டாம் என கூறினார். அதை கவனிக்காமல் பாதி வரை மந்தனா ஓடி வந்து விட்டார்.

    இதனை பார்த்த பிரதிகா மந்தனா அவுட் ஆக கூடாது என நினைத்து கீப்பர் பக்கம் ஓடினார். ஆனால் மந்தனா கீப்பர் பக்கம் நின்றதால் மந்தனா தான் அவுட் என அறிவிக்கப்பட்டது. இதனால் பிரதிகா சோகத்துடன் இருந்தார். அவுட் ஆகி சென்ற மந்தனா மீண்டும் திரும்பி வந்து அவரை சமாதானப்படுத்தி தட்டிக் கொடுத்து சென்றார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    கிரிக்கெட்டில் நிறைய ரன் அவுட் ஆன வீரர், வீராங்கனை ஆக்ரோஷமாக சந்தமிட்ட கோபத்துடன் சென்றதை அதிகம் பார்த்த நிலையில் மந்தனா மற்றும் பிரதிகா செய்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    • ஸ்மிருதி மந்தனா 80 பந்தில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய மந்தனா அவ்வபோது சிக்சர்களை பறக்கவிட்டார்.அவர் 80 பந்தில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதில் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.

    தொடர்ந்து விளையாடிய பிரதிகா ராவலும் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா ஹோஷ் (59) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

    • அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. அதிக பட்சமாக தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    ×