என் மலர்
நீங்கள் தேடியது "உடல் நலம் பாதிப்பு"
- கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும்.
- உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
மற்ற மதுவகைகளை விட தற்போது குளிர்ந்த பீருக்கு தான் தேவை அதிகமாக உள்ளது. பார்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குளிர்ந்த பீர்களை வாங்கி குடிக்கிறார்கள்.
வெயில் தாக்கத்திற்கு பீர் இதமாக இருப்பதாக கருதி பெரும்பாலான மதுபிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். கோடை காலத்தில் எப்போதுமே பீர் விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.
பீர் குடிப்பதால் உடலுக்கு நல்லதா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மது குடிப்பது உடலுக்கு தீங்கானதாகும். இதனால் கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தொடர்ந்து மது பழக்கத்திற்கு ஆளாகி குடிப்பதால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.
மற்றொரு பாதிப்பு வயிற்றுப் பகுதியாகும். மது அருந்துவதால் வயிறு புண்ணாகி அதில் இருந்து ரத்தம் வரக்கூடும். 3-வதாக உடல் உறுப்பான கணையம் பாதிப்படையும். கணையம் பாதிக்கும் போது உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பல்ஸ் குறையும். இதனால் நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் பாதிக்கும்.
4-வது வகை மதுவுக்கு அடிமையாகுதல் ஆகும். தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களால் ஒரு நாள் கூட குடிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற மது போதைக்கு அடிமையானவர்கள் குடிக்காமல் விட்டு விட்டால் ஒரு வலிப்பு வரும்.
திடீரென மதுபழக்கத்தை நிறுத்தும் போது இந்த பாதிப்பு ஏற்படும். இது மூளையையும் பாதிக்கும்.
5-வது வகையான பாதிப்பு தொடர்ந்து மது குடிப்பதால் கை, கால், நரம்புகள் பாதிக்கும். கை, கால் பகுதி உணர்ச்சியற்றதாகி விடும். பாதம் எரியும் அல்லது மறத்து விடும். இது போன்ற பாதிப்புகள் குடியை நிறுத்த முடியாமல் தினமும் குடிப்பவர்களுக்கு ஏற்படும்.
அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 10 முதல் 20 பேர் வரை மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள். இளம் வயதில் மது பழக்கத்திற்கு ஆளாகி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை தற்போது அதிகரித்து உள்ளது. பெண்கள் கூட சிலர் மதுவுக்கு அடிமையாகி சிகிச்சை பெறுகிறார்கள்.
கோடை காலத்தில் பீர் அதிகளவில் குடிப்பதால் உடலுக்கு நல்லது எதுவும் இல்லை. அவை குளிர்ச்சியும் கிடையாது. பீர் குடிப்பதும் உடல் நலத்திற்கு பாதிப்பு தான். பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளை விட பீரில் ஆல்கஹால் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.
பீர் தினமும் குடிப்பது பாதிப்பை உண்டாக்கும். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் இருதயத்திற்கு நல்லது.
குறைவாக குடிக்கும் போது ரத்தக் குழாய் விரிவடையும். குளிர்ந்த பீர் குடிப்பதனாலும் எந்த நன்மையும் இல்லை. கோடை காலத்திற்கு என்றோ குளிர்காலத்திற்கு என்றோ பீரை வகைப்படுத்தக் கூடாது.
எல்லா மதுபானங்களும் உடலுக்கு தீமைதான். ஆனால் பீர் வகைகள் அடிக்கடி எடுக்காமல் குறைவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் காம்ப்ளி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
- பிசிசிஐ வினோத் காம்ப்ளிக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது.
- கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது.
இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டை பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.