என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி கோவில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.
    • பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மூலம் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பழனி கோவிலில் நாள் தோறும் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், பாயாசம் ஆகியவற்றுடன் வழங்கப்படும் அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.

    பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கியூ.ஆர்.கோடு வசதி உள்ள நிலையில் பழனி கோவிலிலும் இது போன்ற வசதி தொடங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


    ஏனெனில் ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்றவற்றில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் குறைந்து கியூ.ஆர். கோடு வசதி மூலமே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் குறைந்த அளவு பணம் கொண்டு வரும் சமயத்தில் அன்னதானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்கொடை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழனி மலைக்கோவிலில் கியூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலின் பல்வேறு இடங்களில் இது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் ரோப் கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கியூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
    • 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பக்தர்களின் நலனுக்காக போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் கூறியதாவது:-

    தைப்பூச பக்தர்களின் நலன் மற்றும் உதவிக்காக பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. குற்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு உதவிடவும் 'மே ஐ ஹெல்ப்' என்ற பெயரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அடிவாரம், பஸ் நிலையம், கிரிவீதிகளில் 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 பேர் கொண்ட 28 குற்ற தடுப்பு போலீஸ் குழு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை இருக்கும். எனவே அதையொட்டிய 4 நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் பஸ்நிலையம், கோவிலுக்கு செல்லும் வழி, வாகன நிறுத்தம் தெரிந்து கொள்வதற்காக 300 வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 300 கேமராக்கள் பொருத்தும் பணியும் நடக்கிறது. ஓரிரு நாட்களில் அவை செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலைக்கோவிலுக்கு செல்ல ஒரு வழிப்பாதை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மலைக்கோவிலுக்கு செல்போன் கொண்டு சென்று பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
    • பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அலகுகுத்தியும், காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் 18 பேர் சண்முகாநதியில் இருந்து பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக பெரிய 2 கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து காரமடை, நால்ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் 15 அடி நீள அலகுகுத்தியும் வந்தனர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், கடந்த 49 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வருகிறோம். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக பழனி சண்முகாநதிக்கு வந்து பின் அங்கிருந்து பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருவோம் என்றனர்.

    ×