என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "மில்கிபூர் இடைத்தேர்தல்"
- மில்கிபூர் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
- அங்கு சமாஜ்வாதி மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு அயோத்தி மாவட்டத்தின் மில்கிபூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பைசாபாத் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி.யானார்.
இதையடுத்து, மில்கிபூர் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. சமாஜ்வாதி சார்பில் அவதேஷ் பிரசாதின் மகன் அஜித் பிரசாத், ஆளும் பா.ஜ.க. சார்பில் சந்திரபானு பஸ்வான் ஆகியோர் களமிறங்கினர்.
இந்நிலையில், அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க.வின் சந்திரபானு பஸ்வான் 61,710 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
மில்கிபூர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடி, அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.