என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமை ஆதீனம்"

    • 1000-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர்.
    • சென்னை, காட்டாங்குளத்தூரில் மே மாதம் 3, 4, 5 ஆகிய நாட்கள் நடத்த உள்ளார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் 27-வது தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கோடு தருமையாதீனம் 26-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1984-ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்கள்.

    இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் (தருமபுரம், மலேசியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில்) நடைபெற்றுள்ளன.

    சென்னை முதல் கன்னியாகுமரி வரை தருமையாதீன சைவசித்தாந்த மாலைநேரக்கல்லூரி தொடங்கப்பெற்று சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் தற்போது 27-வது குருமகாச ன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை நட்சத்திர குருமணிகளும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனமும் இணைந்து 6-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டினை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்துடன் சென்னை, காட்டாங்குளத்தூரில் வருகிற மே மாதம் 3, 4, 5 ஆகிய நாட்களில் நடத்த உள்ளார்கள்.

    சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்தப் பதிவுகள் எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர்களும் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் சைவ ஆதீனங்களின் குருமகாசன்னிதானங்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சைவசமய அறிஞர்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள், சமய ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட் டிற்கான சிறப்பு மலர் ஒன்றும், ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வுக் கோவையாகவும், 10-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட உள்ளது.

    இம்மாநாட்டினை முன்னிட்டு முதற்கட்டமாக சிறப்பு மலர்குழு, கருத்தரங்க குழு, நூல்வெளியீட்டு குழு என 3 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் 1000-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×