search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துபாய் ஆடுகளம்"

    • விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது.
    • கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினாய் என்று விராட் கோலி என்னை பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" என்று பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அப்ரார் அகமது, "விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது. அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய பந்தில் முடிந்தால் சிக்ஸ் அடியுங்கள் என்று நான் அவரை சீண்டினேன். ஆனால் அவர் ஒருபோதும் கோவப்படவில்லை. கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம் நீ நன்றாக பந்துவீசினாய் என்று தெரிவித்தார். அவருடைய பாராட்டு என்னை மகிழ்ச்சியடைய செய்தது" என்று தெரிவித்தார்.

    • இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
    • இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் (பிட்ச்) விவரம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 23-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தாைன 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் கள நடுவர்களாக பால் ரீபெல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்டு இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) செயல்படுவார்கள்.

    ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது நடுவராகவும், தர்மசேனா (இலங்கை) 4-வது நடுவராகவும் இருப்பார்கள். மேட்ச் நடுவராக ரஞ்சன் மதுகல்லே செயல்படுவார்.

    ×