என் மலர்
நீங்கள் தேடியது "ஓ பன்னீர்செல்வம்"
- குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
- காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு சாத்தியமில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதற்கே ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை.
* அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தகுதியில்லை.
* குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
* கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்போது இணைப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை. பிரிந்தது பிரிந்தது தான்.
* தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும்.
- தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும். அதற்கு பல உதாரணங்களை கூறலாம். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க. கட்சிதான் ஆட்சியில் அமரும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. அதனை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி. அதனால் தான் இன்று ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. அதற்கு காரணமான பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு ஓ.பி.எஸ். பேசினார்.
- எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் அணிகள் இணைப்பிற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னரே தெரியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களின் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.