search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94341"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சியினர் சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறை யினர் தற்காலிகமாக சீல் வைத்தனர்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் இதை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்து வதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

    பின்னர் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.

    இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார்.

    இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    • ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைகால கூட்டத் தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு செயலாளர் பி.சி.மோடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தை ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், ஸ்டிரைக் அல்லது எந்த மத விழாவையும் நடத்தும் நோக்கத்திற்காக பயன்படுத்தகூடாது. இதற்கு ஒத்துழைக்க உறுப்பினர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடக்கும்போது பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப அமளியில் ஈடுபட்டதால் சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

    அதேபோல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதையடுத்து, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சஸ்பெண்ட் நடவடிக்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் நடவடிக்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல் என்று கூறிய அவர், சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

    இந்நிலையில், கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

    இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் இந்த நடவடிக்கை மாநிலங்களவையின் அனைத்து விதிகள் மற்றும் நடைமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.

    மத்திய அரசின் சர்வாதிகார முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து  மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாளை ஆலோசிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    பாராளுமன்றம் இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். காங்கிரசை சேர்ந்த பிரதீபா சிங், பா.ஜனதாவை சேர்ந்த ஜியானேஸ்வர் பட்டீல் ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். பிரதீபா சிங் இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்தும், ஜியானேஸ்வர் பட்டீல் மத்திய பிரதேச மாநிலம் கன்வார் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், கல்யான் சிங், செங்குட்டுவன் உள்பட 8 பேருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அதன்பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மரணமடைந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

    12 மணிக்கு பிறகு பாராளுமன்ற மக்களவை கூடியதும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

    உடனே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷமிட்டனர்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    பிரதமர் மோடி

    3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உள்ளதாக பிரதமர் மோடி கடந்த 19-ந் தேதி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்திலேயே இந்த சட்டத்தை ரத்து செய்யும்  மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.

    முன்னதாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி.) சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் கூறி உள்ளனர். இதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

    குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. இதற்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு இன்று கொடுத்தார்.

    இதேபோன்று பல்வேறு கட்சிகளும் தங்கள் மாநில விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று மனு கொடுத்தன.

    இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதேபோல மேல்சபை இன்று கூடியதும் ஒரு மணி நேரத்திற்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 5 பேருக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக புதிய எம்.பி.க்கள் அவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.






    பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

    இதற்கிடையே, கடந்த 19-ந் தேதி டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

    இருப்பினும், பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது.

    கடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடக்கிய ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் இன்னும் நீடிக்கிறது. அந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழு அமைத்துள்ளது.

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலை, ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. அருணாசலபிரதேசத்தில் சீன ராணுவம் கிராமங்களை உருவாக்கி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருவான ‘ஒமிக்ரான்’ என்ற புதிய கொரோனா, இந்தியாவுக்கு வராமல் தடுப்பதில் மத்திய அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது.

    கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதையொட்டி, பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தும் முடிவை விவசாயிகள் ஒத்தி வைத்தனர்.

    அதன்படி, இன்று மக்களவையில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ‘‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளில் ஒரு சிறு குழு மட்டும் போராட்டம் நடத்தி வந்த போதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக ஒவ்வொருவரையும் அரவணைத்து செல்வது இந்த நேரத்தில் அவசியம்’’ என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    அனைத்து கட்சிகளும் இம்மசோதாவை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்கள் எம்.பி.க்கள் தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

    மசோதாவை ஆதரித்தாலும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வேண்டும் என்ற விவசாயிகளின் இதர கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது. இதனால், சபையில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர, 25 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு பட்டியல் தயாரித்துள்ளது. அவற்றில் 3 மசோதாக்கள், அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுபவை.

    போதை மருந்து தடுப்பு மசோதா, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன திருத்த மசோதா ஆகியவைதான் அந்த மசோதாக்கள். தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. பட்டியலை மாற்றி அமைப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதாக்கள், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்தை திருத்துவதற்கான மசோதா, திவால் சட்ட (இரண்டாவது திருத்தம்) மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா ஆகியவை இந்த மசோதாக்களில் முக்கியமானவை.

    தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை ஆய்வு செய்த பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையும் இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதுதவிர, சமையல் எரிவாயு விலை உயர்வு, சீன ஆக்கிரமிப்பு, எல்லை பாதுகாப்பு படை கூடுதல் அதிகாரம், ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் போன்ற பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்று தெரிகிறது. இதனால், இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

    மத்திய அரசு சார்பில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா (3 பேரும் காங்கிரஸ்), சுதீப் பந்தோபாத்யாயா, டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (இருவரும் தி.மு.க.), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), விநாயக் ரவத் (சிவசேனா), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), சஞ்சய்சிங் (ஆம் ஆத்மி), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), பிரசன்ன ஆச்சார்யா (பிஜு ஜனதாதளம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத்தில், பெகாசஸ் உளவு விவகாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தன. எல்லை பாதுகாப்பு படை கூடுதல் அதிகாரத்துக்கு எதிராகவும் விவாதிக்குமாறு வலியுறுத்தின.

    கொரோனாவுக்கு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடும், விவசாயிகள் போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக சட்டம் கொண்டு வருமாறும், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு எதிராக சட்டம் கொண்டு வருமாறும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.

    விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச அனுமதிக்காததால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் வெளிநடப்பு செய்தார்.

    கூட்டத்தில், 31 கட்சிகள் சார்பில் 42 எம்.பி.க்கள் பங்கேற்றதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இரு அவைகளின் தலைவர்களும் அனுமதிக்கும் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

    பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை  ரத்து செய்யும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. 

    குறிப்பாக வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும்படி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்தை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான பாஜக தயாராகி வருகிறது. 

    இந்நிலையில், பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பது வழக்கம். ஆனால் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய மந்திரியும், பாஜக மக்களவை குழு துணை தலைவருமான ராஜ்நாத் சிங், மாநிலங்களவை குழு தலைவர் பியூஷ் கோயல், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பாராளுமன்றம்

    இக்கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    முக்கியமான பிரச்சினைகளில் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு, பாஜக எம்பிக்கள் அனைவரும் வருகை தருவது முக்கியம் என்று ஜே.பி.நட்டா கூறினார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் பதிலளிக்க கட்சி எம்.பி.க்கள் நன்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,  மத்திய அரசு செய்த நல்ல பணிகளை, குறிப்பாக கடினமான கொரோனா காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முன்னிலைப்படுத்துமாறு எம்.பி.க்களிடம் நட்டா கூறியிருக்கிறார்.

    இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது அவசியம் என அனைவரும் வலியுறுத்தினர். பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்  என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார்.
    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகள் தங்கள் யோசனைகளை முன்வைத்தன. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரவேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என அக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூறினர். பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாநிலங்களவையில் 2010ம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேறியது. 

    மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது.  இந்த ஆண்டாவது மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக அறிவித்தார் ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    பிரதமர் மோடி

    இந்த நிலையில் நாளை மறுநாள் (29-ந் தேதி) பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் முதல் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... ஜெயலலிதா வீட்டு சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்- கலெக்டரிடம் தீபா, தீபக் மனு

    அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை எப்போதும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    அரசியலமைப்பு சட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் இந்திய அரசிலமைப்பு சட்ட தின விழா நடந்தது. விழாவையொட்டி பாராளுமன்றத்தில் அலங்காரம் செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

    நாட்டில் சமஸ்தானங்களை அரசியலமைப்பு ஒன்றிணைத்து இருக்கிறது. அரசியலமைப்பு நாட்டை ஒன்றிணைக்கிறது. அரசியலமைப்பு சட்ட தினம் என்பது பாராளுமன்றத்தை வணங்கும் தினம்.

    அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திரபிரசாத் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான ஆளுமைக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள்.

    அரசியல் சாசனத்தை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை எப்போதும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.

    அரசியலமைப்பு சட்ட தினமும் கொண்டாடப்பட வேண்டும். ஏனென்றால் நமது பாதை சரியானதா? இல்லையா? என்பதை மதிப்பிடுவதற்காகவே கொண்டாடப்பட வேண்டும்.

    எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தது அம்பேத்கர், சபாநாயகருக்கு மரியாதை செய்யாமல் இருப்பதற்கு சமமானது.

    இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அரசியல் கட்சிகள் ஜனநாயக தன்மை இழக்கும்போது அரசியல் சாசன உணர்வு பாதிக்கப்படுகிறது.

    காஷ்மீர் முதல் குமரி வரை பல கட்சிகள் வாரிசு அரசியலை நடத்துகின்றன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது அரசியல் சாசனத்தின் மீது பற்றுக்கொண்ட மக்களுக்கு கவலை அளிக்கும் வி‌ஷயமாகும்.

    ஒரு குடும்பத்தால் தலைமுறை தலைமுறையாக கட்சி நடத்தப்பட்டு முழு கட்சி அமைப்பும் ஒரு குடும்பத்துடன் இருந்தால் அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பிரச்சினையாகும்.

    அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளேயே ஜனநாயகத்தன்மையை இழக்கும் போது அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்படும்.

    உட்கட்சி ஜனநாயகத்தை பின்பற்றாத கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தை எப்படி காக்கும்? நாட்டுக்கு எதிரான ஊழலை கண்டும் காணாமலும் இருப்பது மக்களுக்கு எதிரானது. இந்தியா இத்தகைய நெருக்கடியை நோக்கி செல்கிறது.

    இளைஞர்களின் மனம் துவண்டு உள்ளதால் மக்களை கொள்ளையடிக்கும் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தில் உரிமைகளுக்காக போராடிய போதும் கடமைகளுக்கு தயாராக முயன்றார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடமையை வலியுறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் கடமையின் பாதையில் முன்னேற்றுவது அவசியம்.

    நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் இந்த நாளில் நாம் நினைத்து பார்க்க வேண்டும். நாட்டின் எதிரிகள் நாட்டுக்குள் புகுந்து மும்பையில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய இன்று நமக்கு மிகவும் சோகமான நாள்.

    தீவிரவாதிகளுடன் போரிடும்போது நாட்டின் துணிச்சலான வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இன்று அந்த தியாகங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



    அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணித்தன.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, பெரும் பாரம்பரியம். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

    பிரதமர் மோடி

    இந்த நாள்தான் எதிரிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திய துக்க தினம்.  26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    நாட்டில் பல கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
    குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். நம்மை நாமே ஆளவேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். 

    நமது உரிமைகளை பாதுகாக்க கடமை என்கிற பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம். அரசியலமைப்புச் சட்டம்  உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவேண்டும். அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேணடும். ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரசியல் சாசன தினத்தையொட்டி, பாராளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    புதுடெல்லி:

    அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உரையாற்றுகிறார்கள்.

    குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணித்தன.
    ×