search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    • கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
    • வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, பல்வேறு துறைகளிலும் நடக்கும் முறைகேடுகள், சட்டம்- ஒழுக்கு சீர்குலைவு ஆகியவற்றை சுட்டிக்காட்டி நாளை (5-ந் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

    கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

    இதேபோல் வட சென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென்சென்னை, தென்சென்னை கிழக்கு, ஆகிய 7 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    பாதுகாப்பு, போக்குவரத்து பிரச்சினைகளால் ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றனர்.

    இதையடுத்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எனவே நாளை (செவ்வாய்கிழமை) சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மட்டுமே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அண்ணாமலை பங்கேற்கிறார். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அந்த அந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

    டெல்லி பாஜக எம்.பி. கம்பீருக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணைபை தீவிரப்படுத்தினர்.
    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பீர் காஷ்மீர் பிரச்சினை உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி ‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து இ-மெயில் மூலம் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. பின்னர் மறுநாளும் அதே இ-மெயில் முகவரியில் இருந்து வந்த மிரட்டலில், காஷ்மீர் பிரச்சினை மற்றும் அரசியலில் இருந்து ஒதுங்காவிட்டால், கொலை செய்வோம் என கூறப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து கம்பீருக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணைபை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் அந்த அமைப்பிடம் இருந்து நேற்று மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இ-மெயிலில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், ‘உங்கள் டெல்லி போலீசும், ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்வேதாவும் எதையும் செய்ய முடியாது. டெல்லி போலீசிலும் எங்கள் உளவாளிகள் இருக்கிறார்கள். உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களையும் பெற்று இருக்கிறோம்’ என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணைபை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கம்பீருக்கு 6 நாட்களில் 3-வது முறையாக கொலை மிரட்டல் வந்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெபரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை  ரத்து செய்யும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. 

    குறிப்பாக வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும்படி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்தை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான பாஜக தயாராகி வருகிறது. 

    இந்நிலையில், பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பது வழக்கம். ஆனால் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய மந்திரியும், பாஜக மக்களவை குழு துணை தலைவருமான ராஜ்நாத் சிங், மாநிலங்களவை குழு தலைவர் பியூஷ் கோயல், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பாராளுமன்றம்

    இக்கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    முக்கியமான பிரச்சினைகளில் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு, பாஜக எம்பிக்கள் அனைவரும் வருகை தருவது முக்கியம் என்று ஜே.பி.நட்டா கூறினார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் பதிலளிக்க கட்சி எம்.பி.க்கள் நன்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,  மத்திய அரசு செய்த நல்ல பணிகளை, குறிப்பாக கடினமான கொரோனா காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முன்னிலைப்படுத்துமாறு எம்.பி.க்களிடம் நட்டா கூறியிருக்கிறார்.

    இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது அவசியம் என அனைவரும் வலியுறுத்தினர். பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்  என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார்.
    51 உறுப்பினர்கள் கொண்ட அகர்தலா மாநகராட்சியில் எதிர்க்கட்சிகள் எந்த வார்டிலும் வெற்றி பெறவில்லை. அனைத்து வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
    அகர்தலா:

    பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் கடந்த 25 ஆம் தேதி  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  இதில் பதிவான வாக்குகள்  இன்று எண்ணப்பட்டன.

    இதில்,  பா.ஜ.க.  அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

    மொத்தம் உள்ள 334 இடங்களில் பாஜக 329 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதேபோல் அகர்தலா மாநகராட்சியையும் பாஜக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 51 உறுப்பினர்கள் கொண்ட அகர்தலா மாநகராட்சியில் எதிர்க்கட்சிகள் எந்த வார்டிலும் வெற்றி பெறவில்லை. அனைத்து வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


    கோவாய் நகராட்சி, பெலோனியா நகராட்சி, குமார்காட் நகராட்சி மற்றும் சப்ரூம் நகர பஞ்சாயத்துகளிலும் பாஜக அனைத்து வார்டுகளையும் கைப்பற்றியது. 25 வார்டுகள் கொண்ட தர்மாநகர் நகராட்சி, 15 வார்டுகள் கொண்ட தெளியமுரா நகராட்சி, 13 வார்டுகள் கொண்ட அமர்பூர்ந கர் பஞ்சாயத்தையும் பாஜக முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் உத்திரபிரதேச மாநிலத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை, விவசாயிகள் தற்கொலை இல்லை, பசி பட்டினியால் யாரும் உயிரிழக்கவில்லை என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
    லக்னோ:

    403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் மைஜாபூர் நகரில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். 

    அந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக இது போன்ற திட்டங்களே முன்னறே தொடங்கி இருக்கலாம். 

    ஆனால், முந்தைய அரசுகள் ஒருசார்பாக செயல்பட்டு மக்களை தவறாக வழிநடத்தின. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்றவற்றை யார் தடுத்தது. திட்டங்களை செயல்படுத்த அவர்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களது ஆட்சி காலத்தில் அவர்களின் குடும்பம், உறவினர்கள், சாதி, மதத்திற்கான பணிகள் நடைபெற்றதே தவிர வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றவில்லை.

    காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி

    காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அவர்களது ஆட்சி காலத்தில் வன்முறையை தூண்டின. அவர்களது ஆட்சி காலத்தில் நேர்மையின்மை, லஞ்சம், வன்முறைகள் நடைபெற்றன. 

    பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை, விவசாயிகள் தற்கொலை இல்லை, பசி பட்டினியால் யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

    புதுவை முத்தியால்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் யாராவது கட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது70). இவரது மூத்த மகள் கவுரி. இவரது கணவர் ராஜி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபராம் செய்து வருகிறார்.

    இவர்களது மகன் சுரேஷ். இவர் உழவர்கரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி தலைவராக உள்ளார். சீனிவாசன் வீடு 3 மாடியில் அமைந்துள்ளது.

    வீட்டின் கீழ் தளத்தில் 4 அறைகள் உள்ளது. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாரதிய ஜனதா அலுவலகம் நடத்தி வருகிறார். அதே தளத்தில் சீனிவாசன், அவரது மனைவி ஜோதி (60), 2-வது மகள் சாந்தி (42), இளைய மகள் எழிலரசி (38), சீனிவாசன் பேத்திகள் தீபிகா (15), ஸ்ரீ (14) ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

    இன்று காலை 6.30 மணியளவில் சீனிவாசன் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. வீடும் உருக்குலைந்தது. வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து கிடந்தது.

    வீட்டில் இருந்த ஜோதி, எழிலரசி, சிறுமி ஸ்ரீ ஆகியோர் தீக்காயத்துடன் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    கோட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ, நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீடு முற்றிலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

    வீட்டின் மேல் தளத்தில் ஜோதி சிக்கி கொண்டார். அவரை மாடி வழியாக இறங்கி ஸ்டிரக்சர் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். எழிலரசி மற்றும் சிறுமி ஸ்ரீயையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோதி, எழிலரசி ஆகியோர் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் இருந்த சாந்தி, தீபிகா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். வீட்டின் பின்பக்க அறையில் இருந்ததால் சீனிவாசன் காயமின்றி தப்பினார்.

    சீனிவாசன் வீட்டில் வைக்கப்பட்டடிருந்த பிரிட்ஜ் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. ஆனால் சிலிண்டர் அப்படியே இருந்தது. மேலும் சுரேஷ் நடத்தி வந்த பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ‌ஷட்டர் பெயர்ந்து அப்பகுதியில் உள்ள சந்தில் விழுந்து கிடந்தது.

    சீனிவாசன் வீட்டின் அருகில் இருந்த வீடுகளிலும், எதிரில் உள்ள வீடுகளிலும் கீறல் விழுந்துள்ளது. மேல் மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் இறுகி விட்டது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் யாராவது கட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீயணைப்புதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சீனிவாசன் வீட்டில் உள்ள சிலிண்டர் அப்படியே உள்ளது. பிரிட்ஜ் மட்டும்தான் தீபிடித்து எரிந்துள்ளது.

    மேலும் மின்கசிவு ஏற்பட்டதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே கட்சி அலுவலகத்தில் யாராவது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு பின்னரே இது தொடர்பான முழுவிவரம் தெரியவரும் என்றார். 

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிப்படி பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், மழை வெள்ள பாதிப்புக்கு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க கோரியும் பா.ஜனதாவினர்தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் பா.ஜனதாவினர் நின்றபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெட்ரோல்


    “தி.மு.க. அரசே, தமிழக அரசே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று”, “பெட்ரோல்- டீசல் விலையை குறைத்திடு”, “மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கிடு” என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ், கராத்தே தியாகராஜன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா உள்பட பல நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. தற்போது வாணியம்பாடி, நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

    இந்த அலுவலகங்களை இன்று திருப்பூரில் வைத்து காணொலி காட்சி மூலம் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

    தமிழகத்தை பொருத்தவரை பா.ஜனதா கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. ஆனால் பா.ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு திட்டம் போட்டு பொய்யான தகவல்கள் மூலம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர். அதற்கு பல்வேறு தளங்களையும் கையில் எடுத்துள்ளனர்.

    ஆனால் அவற்றை நாங்கள் உடைத்து வருகிறோம். அதற்கு சாட்சி தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்து வரும் தேர்தலிலும் இந்த எண்ணிக்கை உயரும். எங்களை பொருத்தவரை கட்சி வளர்ச்சி என்பது மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக குரல் கொடுத்ததன் மூலம் கட்சி வளரும் என நம்புகிறோம்.

    உதாரணமாக முல்லை பெரியாறு, காவேரி பிரச்சினை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். அதேநேரம் தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை எல்லாம் நாங்கள் சுட்டிக்காட்ட தவறுவதில்லை. மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதி கொடுத்து எல்லாவற்றையும் நிறைவேற்றியது போல அவர்களுடைய வழக்கமான பாணியில் மாய தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள்.

    பெட்ரோல்-டீசல் விலையை குறைப்போம் என்று அவர்கள் தான் சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் சொல்லாத மத்திய அரசு குறைத்து இருக்கிறது. இதைத்தான் சுட்டிக்காட்டி தி.மு.க. அரசை எதிர்த்து போராடுகிறோம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. அதிக இடங்களை கைப்பற்றுவோம். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. பா.ஜனதாவுக்கு எம்.பி.க்கள் இல்லாவிட்டாலும் கூட 2 கவர்னர்கள், ஒரு மத்திய மந்திரி உள்பட பல பொறுப்புகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் காலம் பா.ஜனதா காலமாக மாறும். அதற்காகவே உழைத்து வருகிறோம். இன்றைய செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் தீட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திரிபுராவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டினார்.
    அகர்தலா:

    நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவருமான சயானி கோஷ், நேற்று முன்தினம் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். அவரை மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் பிரசார கூட்டத்திற்கு இடையூறு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதனையடுத்து சயானி கோஷை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து சயானி கோஷ் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சயோனி கோஷ்க்கு இன்று ஜாமீன் வழங்கியது. 

    அபிஷேக் பானர்ஜி

    இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி அகர்தலாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திரிபுராவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக குற்றம்சாட்டினார். 

    ‘வாக்குச்சாவடிக்கு வருவதை உறுதிசெய்ய பாஜக கொடியை ஏந்த வேண்டும் என்றால், அதைச் செய்யுங்கள். குண்டர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால் அவர்களின் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். ஆனால் வளர்ச்சிக்கு ஆதரவான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று அபிஷேக் பானர்ஜி கேட்டுக்கொண்டார்.

    வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர்ணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

    இளைஞரணி மாநில துணை தலைவர் குமார் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட தலைவர் தசரதன், மகளிர் அணி மாவட்ட தலைவி கிருஷ்ணகுமாரி இளைஞரணி செயலாளர்கள் ராஜேஷ், சரவணன், கனிமொழி திருமாறன், சத்திஷ், கிஷேர், சுகுணா, லஷ்மி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெகன், பொது செயலாளர்கள் பாஸ்கர், பாபு செயலாளர்கள் ஏழுமலை, மண்டல் தலைவர்கள் ஜெகன், ஓ.பி.சி. அணி செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட சுமார் 200 பேர் கலந்துக்கொண்டனர்.
    பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த இளைஞரணி தலைவர் சயானி கோஷ், நேற்று முன்தினம் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். அவரை மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து சயானி கோஷை போலீசார் கைது செய்தனர். கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், திரிபுராவில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அரசியல் கட்சிகள் அமைதியான முறையில் பிரசாரம் செய்வதற்கான சட்ட  உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று திரிபுரா காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. திரிபுராவில் ஆளும் பாஜக ஆதரவாளர்கள், தங்கள் வேட்பாளர்களை பிரசாரம் செய்ய விடாமல் தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

    மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவில்லை.

    மேலும் மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல்-டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.

    தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்.

    பெட்ரோல் விலை உயர்வு

    மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

    இன்று (திங்கட்கிழமை) இளைஞர் அணி, மகளிர் அணி சார்பில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

    26-ந்தேதி- விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாட்டு வண்டிப் பயண ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    27-ந்தேதி- சிறுபான்மையினர் அணி, வழக்கறிஞர் பிரிவு சார்பில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து நம் கோரிக்கையின் நியாயத்தை விளக்குதல்.

    28-ந்தேதி- எஸ்.சி. எஸ்.டி. அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம்.

    30-ந்தேதி- ஓ.பி.சி. அணி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி- மகளிர் அணி சார்பில் வீடுகளின் முன்பாக கோரிக்கை அட்டையை ஏந்தும் போராட்டம்.

    2-ந்தேதி- கல்வியாளர் பிரிவு சார்பில் மக்களுக்கு கோரிக்கையை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல்.

    3-ந்தேதி- பிரசாரப்பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்துதல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்

    ×